Sunday, May 18, 2008

விஜய் டெண்டுல்கர் மரணம்

பிரபல மராத்தி நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் இன்று மரணம் அடைந்தார். 80 வயதான டெண்டுல்கர் புனேயில் உள்ள வீட்டில் தன் இறுதிக் காலங்களை கழித்து வந்தார். உடல்நலக் குறைவோடு இருந்த அவர் இன்று காலை 8 மணிக்கு இறந்தார்.
வீரியம் கொண்டு நாடக ஆக்கங்களைக் கொடுத்தவர். நாட்டின் முதன்மையான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயர் பெற்றிருந்தார். சினிமாவிலும் தன் முத்திரையைக் காண்பித்தவர். Ôஅர்த் சத்யாÕ ஒரு எடுத்துக்காட்டு.
பத்மபூஷண், சங்கீத நாடக அகடமி மற்றும் தேசிய அளவில் சினிமா விருதுகளும் பெற்றவர்.
அவர் ஆத்மா சாந்தியடைவதாக

No comments: