Monday, December 8, 2008

விலகுகிறேன்...விடைபெறுகிறேன் பதிவர்களே

விந்து முந்துதல், சொப்ன ஸ்கலிதம், உறுப்பு சிறுத்தல், விரை வீக்கம், நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், சதா சோர்வு போன்ற பல்வேறு உபாதைகளில் ஆட்பட்டு அல்லலுறுவதால் பதிவுலகில் இருந்து விலகுகிறேன். இதுவரை ஆதரவு கொடுத்த பதிவர்களுக்கு நன்றி.

Wednesday, October 29, 2008

உ.பி. தொழிலாளி அடித்துக் கொலை

ராஜ்தாக்கரே கைங்கர்யம். இனவெறியில் எரிந்து கொண்டிருக்கிறது மும்பை. இதோ நேற்று ஓடும் ரயிலில் நடந்த இந்த பயங்கரத்தை கேளுங்கள்:
மும்பை பஸ்சில் பீகார் இளைஞர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரபிரதேச தொழிலாளி ஒருவர் நேற்று புறநகர் ரயிலில் மராத்தி இளைஞர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரை சேர்ந்தவர் தரம்தேவ் ராய் (25). கடந்த சில மாதங்களாக மும்பையில் கூலி வேலை செய்து வந்தார். குர்லா பகுதியில் தங்கியிருந்தார்.
நேற்று வேலையை முடித்-துக் கொண்டு சக தொழிலாளர்களுடன் தரம்தேவ் வீடு திரும்-பிக் கொண்டிருந்தார். சத்ரபதி சிவாஜி ஸ்டேஷனில் இருந்து கோபோலி செல்லும் புறநகர் ரயிலில் அவரும் சக தொழிலாளர்களும் சென்றனர்.
அதே ரயிலில் பயணம் செய்த மராத்தி இளைஞர்கள் சிலர் இவர்களிடம் பேச்சு கொடுத்தனர். இவர்-கள் உத்-த-ர-பி-ர-தே-சத்தை சேர்ந்-த-வர்-கள் என்று தெரிந்-த-தும் Ôசற்று தள்ளி உட்-கா-ருங்-கள்Õ என்று கூறி-யுள்-ள-னர்.
சிறிது நேரத்-துக்கு பிறகு, Ôமும்-பைக்கு எதற்-காக வந்-தீர்-கள்?Õ என்று கேட்-ட-னர். கூலி வேலைக்கு வந்-த-தாக உ.பி. தொழி-லா-ளர்-கள் கூறி-னர். வெளி-மா-நி-லத்-த-வர்-கள் வரு-வ-தால் எங்-களுக்கு எந்த வேலை-யும் கிடைப்-ப-தில்லை என்று கூறி இளை-ஞர்-கள் கெட்ட வார்த்-தை-யால் திட்-டி-யுள்-ள-னர்.
இத-னால் இரு தரப்-பி-ன-ருக்-கும் வாக்-கு-வா-தம் ஏற்-பட்-டது. ஆத்-தி-ரம் அடைந்த மராத்தி இளை-ஞர்-கள் 10 பேர் சேர்ந்து உ.பி. தொழி-லா-ளர்-களை சர-மா-ரி-யாக அடித்-த-னர். இதில் படு-கா-யம் அடைந்த தரம்-தேவ் மயங்கி கீழே சரிந்-தார். சக தொழி-லா-ளர்-கள் பதற்-றம் அடைந்து அவரை உடனே பட்-லா-பூ-ரில் உள்ள ஆஸ்-பத்-தி-ரிக்கு கொண்டு சென்-ற-னர். தாக்-கு-த-லில் கல்-லீ-ரல் பயங்-கர சேத-ம-டைந்-த-தால் தரம்-தேவ் இறந்-து-விட்-டார் என்று டாக்-டர்-கள் கூறி-னர்.
இது-கு-றித்து மும்பை ரயில்வே போலீ-சார் கொலை வழக்கு பதிவு செய்து விசா-ர-ணையை தொடங்-கி-யுள்-ள-னர்.
ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் மாண-வர்-கள் மீது மகா-ராஷ்-டிர நவ-நிர்-மாண் சேனா தொண்-டர்-கள் கடந்த சில நாட்-களுக்கு முன்பு தாக்-கு-தல் நடத்-தி-னர்.
மும்பை பஸ்சை துப்-பாக்கி முனை-யில் கடத்த முயன்-ற-தாக கூறி பீகார் இளை-ஞர் ராகுல் ராஜ் என்-ப-வர் நேற்று முன்-தி-னம் போலீ-சா-ரால் என்-க-வுன்ட்-டர் நடத்தி சுட்-டுக் கொல்-லப்-பட்-டார்.
இந்-நி-லை-யில், அடுத்த நாளி-லேயே உத்-த-ர-பி-ர-தேச கூலித் தொழி-லாளி ஒரு-வர் புற-ந-கர் ரயி-லில் அடித்தே கொல்-லப்-பட்ட சம்-ப-வம் நாடு முழு-வ-தும் பெரும் பர-ப-ரப்பை ஏற்-ப-டுத்-தி-யுள்-ளது.

Monday, October 20, 2008

மனித சங்கிலி ஒத்திவைப்பு

இலங்கை தமிழர் பிரச்னைக்காக சர்வ கட்சி சார்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க இருந்த மனித சங்கிலி போராட்டம், அக்டோபர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறதாம்.

காரணம்: பெருமழை.

அடப்பாவிகளா, குடையைப் பிடிச்சு நடத்தக் கூடாதா?

இது எனது 60-வது பதிவு

வலையுலக நண்பர்களே இது எனது 60வது பதிவு. இதுவரை 59 பதிவுகள் போட்டிருந்தேன். இதோ மேலும் ஒன்று. ஆக மொத்தம் 60. அதாவது 60வது பதிவு. நன்றி.

Tuesday, October 14, 2008

கனிமொழி ராஜினாமா

என் பிரெண்ட் போன் பண்ணான். கனிமொழி ராஜினாமா பண்ணியாச்சாம்.

விஷயம் என்னன்னு தெரிய எனக்குத் தெரிஞ்ச தலைமைச் செயலகத்துல இருக்கும் செயலாளர் ஒருவர கேட்டேன் (ஜிம்கானா கிளப் பார்ட்டி). அவர் சொன்னது.


மார்க்சிஸ்ட் கம்யூ வரதராஜன், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் இன்று காலை சந்தித்தார். இதற்கு பின் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி.
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்விட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று சர்வ கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கும் இது பொருந்துமா? என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த கருணாநிதி, அவர்களுக்கும் பொருந்தும் என்றார்.
பேட்டி முடிந்ததும் கனிமொழி கருணாநிதியை சந்தித்து, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்ப-டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லி கடிதம் கொடுத்தாராம். அதை கருணாநிதி கையில் வைத்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை கருணாநிதிகிட்ட ஏன் கொடுக்கணும்? குழப்பமா இருக்குப்பா.

Monday, October 13, 2008

DO NOT USE

Dear All................................... Make a Check list, check whether this medicine is in our home or whether it has recommended by our doctor... pls do not use it..

Please Read Very Carefully - INFORM ALL YOUR FRIENDS & FAMILY MEMBERS


India has become a dumping ground for banned drugs; also the business for production of banned drugs is booming. Plz make sure that u buy drugs only if prescribed by a doctor(Also, ask which company manufactures it, this would help to ensure that u get what is prescribed at the Drug Store) and that also from a reputed drug store. Not many people know about these banned drugs and consume them causing a lot of damage to themselves. We forward Jokes and other junk all the time. This is far more important.

Please Make sure u forward it everyone u know.


DANGEROUS DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLE IN INDIA . The most common ones are action 500 & Nimulid.


PHENYLPROPANOLAMINE:
cold and cough. Reason for ban : stroke.
Brand name : Vicks Action-500
________________________________________________________________________
ANALGIN:
This is a pain-killer. Reason for ban: Bone marrow depression.
Brand name: Novalgin
___________________________________________________________
CISAPRIDE:
Acidity, constipation. Reason for ban : irregular heartbeat
Brand name : Ciza, Syspride
____________________________________________________________
DROPERIDOL:
Anti-depressant. Reason for ban : Irregular heartbeat.
Brand name : Droperol
______________________________________________________________
FURAZOLIDONE:
Antidiarrhoeal. Reason for ban : Cancer.
Brand name : Furoxone, Lomofen
_____________________________________________________________
NIMESULIDE:
Painkiller, fever. Reason for ban : Liver failure.
Brand name : Nise, Nimulid
________________________________________________________________________

NITROFURAZONE:
Antibacterial cream. Reason for ban : Cancer.
Brand name : Furacin
________________________________________________________________________

PHENOLPHTHALEIN:
Laxative. Reason for ban : Cancer.
Brand name : Agarol
______________________________ __________________________________________

OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug. Reason for ban : Bone marrow depression.
Brand name : Sioril
_______________________________________________________________________
PIPERAZINE:
Anti-worms. Reason for ban : Nerve damage.
Brand name : Piperazine
________________________________________________________________________
QUINIODOCHLOR:
Anti-diarrhoeal. Reason for ban : Damage to sight.
Brand name: Enteroquinol
PLZ SPREAD THE INFO....IF U CAN......FOR BETTER FUTURE

Friday, September 26, 2008

போடா...போய் சிக்கன் கொண்டா... (விஜய்காந்த் டமாஸ்)

என் சினிமா நண்பன் சொன்ன கதை இது. விஜய்காந்த்துக்கு திருமணம் ஆகாத நேரம். அவரது ஆபீசில் எப்போதும் நண்பர்கள் கூட்டத்துடன் இருப்பார். ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்கு எல்லோரும் தயார் ஆனார்கள். விஜய்காந்த், இப்ராகிம் ராவுத்தர், டைரக்டர் ஆர். சுந்தர்ராஜன் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். நல்ல தலைவாழை இலை போட்டு சாப்பாடு. பரிமாறுகிற இளம்வயது வாலிபன், வரிசையாக எல்லா இலைகளிலும் சிக்கன் துண்டை போட்டுக்கொண்டு வந்தான். ஆர். சுந்தர்ராஜனை கவனிக்காமல் சென்றுவிட்டான். சுந்தர்ராஜனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவனைக் கூப்பிட்டார்.

"ஏய் இங்க வா"

"சார்..."

"உம் பேரு என்ன"

"முருகனுங்க"

"எந்தூரு"

"வாடிபட்டிங்க"

"என்னா படிச்சிருக்க"

"மூணாங் கிளாசுங்க"

உடனே அவனை முறைத்துப் பார்த்த ஆர். சுந்தர்ராஜன் கோபத்துடன் இப்படிச் சொன்னாராம்:

"இந்த ஆபீஸ்லயே அதிகமா படிச்சவன்ற திமிர்ல ஆடாத. போடா...போய் சிக்கன் கொண்டு வா"

Thursday, September 25, 2008

ரொம்ப நன்றி சாரு அவர்களே

திடீரென பீட்ஜெட்டில் சாரு ஆன்லைன் வழியாக பலர் என் பிளாக் பக்கம் வருவதை பார்த்து அரண்டுவிட்டேன். அவரது ஆன்லைன் போய் பார்த்தபோதுதான் தெரிந்தது. என் பிளாக் பிடித்திருந்தது என்று கூறி பல பதிவுகளை எடுத்துப்போட்டு பாராட்டி இருந்தார் சாரு. என் கண்ணில் நீர் நிறைந்துவிட்டது (உண்மையிலேயே). ரொம்ப நன்றி சாரு அவர்களே. வெளிநாட்டு வாடிக்கையாளர்களோடு நாளும் அல்லாடும் என் பணிக்கு இடையே இப்படி ஒரு வலைப்பதிவை ஜாலியாக தொடங்கி ஏதோ கிறுக்கிக் கொண்டு இருந்தேன். பெரும் எழுத்தாளர் ஒருவருக்கே அது பிடித்துப் போனது என் பேறு. ஆனால் சந்தடிசாக்கில் சக பதிவர்களை கிண்டலடிப்பதே இவன் வேலை என்பது போல ஒரு தொனி அதில் இருப்பதாக தெரிகிறது. பதிவுலகத் தோழர்களே அப்படியெல்லாம் இல்லை. அதெல்லாம் ச்சும்மா லுல்லாட்டி. எனவே வழக்கம்போல் இரண்டு, மூன்று பின்னூட்டங்களுடன் உங்கள் ஆதரவை எனக்கு நல்கிக் கொண்டிருக்கவும். சாருவுக்கு மறுபடி என் உளப்பூர்வ நன்றி.

Monday, September 22, 2008

டோண்டு ராகவனிடம் 2 கேள்விகள்

வலையுலகின் புதியவனான எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. சொல்லப்போனால் கவனிக்கக்கூட மறந்துவிட்டேன். ஆம். நான் ஐம்பது பதிவுகளுக்கும் அதிகமாக எழுதியிருக்கிறேன். இது 54வது பதிவு. மிக நெகிழ்வாக இருக்கிறது. முதல் பதிவு என்ற ஒற்றை வரியோடு என் முதல் பதிவை எழுதினேன். அது பல அர்த்த விரிவுகளுக்கு இட்டுச் சென்றதாக பல நண்பர்கள் கூறினர். இந்த ஐம்பது பதிவு கால இடைவெளியிலே எவ்வளவோ நிகழ்வுகள். திரும்பிப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. இவ்வளவு செய்திருக்கிறோமோ என்று என்னையே வியந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் பொறுப்பும் அதிகரித்து இருக்கிறது என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.

என் பதிவுகளிலேயே எனக்குப் பிடித்த பதிவு என்று சுட்டிக் காட்டச் சொன்னால் இரு பதிவுகளை குறிப்பிடுவேன். ஒருமுறை தமிழ்மணம் திறந்து பலர் பதிவுகளைப் படித்தே நள்ளிரவு ஆகிவிட்டது. மிக தூக்கமாக வந்தது. எனவே தூக்கம் வருகிறது தூங்க போகிறேன் என்று ஒரு பதிவிட்டேன். அதற்கு ஒரு அனானி குட்நைட் என்று பின்னூட்டம் இட்டார். அந்த அன்பில் உண்மையிலே கரைந்து போனேன். மற்றொரு அன்பர் விதேச பாஷையில் பின்னூட்டி நலம் விசாரித்தார். ஒரு பிளாக்கராக இருப்பதன் விழுமியத்தை நான் அறிந்த தருணம் அது. மற்றொரு பதிவு ரிமைண்டர். பொதுவாக ஒரு நாளில் நான் செய்ய உத்தேசித்துள்ள வேலைகளை எனது மொபைல் போனில் குறித்து வைப்பது வழக்கம். அப் பதிவிட்ட சமயம் என் மொபைல் சார்ஜரில் இருந்தது. எனவே ரிமைண்டரை ஒரு பதிவாகவே வெளியிட்டேன். உலகத் தமிழர்கள் அனைவரும் அதை படித்து அறிந்தார்கள் என்பதே நான் ஒரு வலைப்பதிவாளனாக இருப்பதன் அர்த்தத்தை எனக்கு விளக்கியது.
இந்த ஐம்பதாம் பதிவு கொண்டாட்டத்தை ஒட்டி, நெடுநாளாக என் மனத்தில் இருப்பதை வெளியிட துணிபு கொண்டுள்ளேன். வெகுமூத்த பதிவரான டோண்டு ராகவனிடம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என நான் வலையுலகுக்கு வந்த காலத்தில் இருந்தே நினைத்து வருகிறேன். ஆனால் மிக ஜுனியரான நான் எப்படி அதைக் கேட்பது என்று இயல்பிலேயே என்னுள் உள்ள தயக்கமும் சங்கோஜமும் என்னை தடுத்துவந்தது. ஒருமுறை என் பதிவில் பின்னூட்டிய டோண்டு அவர்கள் கட் அண்ட் பேஸ்ட் செய்யும் நுட்பம் குறித்து சொல்லியிருந்தார். அப்போதுகூட கேட்க நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் ஐம்பது பதிவுகள் கடந்த நிலையில் வலையுலகில் எனக்கும் ஒரு நிரந்தர இடம் கிடைத்த தன்னம்பிக்கையோடு
டோண்டு ராகவனிடம் என் கேள்விகளை முன்வைக்கிறேன்.

கேள்வி நெ.1 : கம்ப்யூட்டர் துடைப்பதற்காக வைத்திருக்கும் மஞ்சள் துணியை நன்றாக விரித்துவைத்துதான் துடைக்க வேண்டுமா? மடக்கிய நிலையிலேயே துடைக்கலாமா?

கேள்வி நெ.2 : ஒருமுறை ஷட்டவுன் செய்யாமல் அப்படியே சுவிட்சை ஆப் செய்துவிட்டேன். இதனால் கம்ப்யூட்டருக்கு கெடுதி ஏதும் உணடா?

ரிமைண்டர்

இன்னிக்கு காலைலே ஐசிஐசிஐ பாங்க் போகணும். அப்புறம் சாய்ந்தரமா மார்க்கெட் போகணும். 7 மணிக்கு வியாசர்பாடி டாஸ்மாக் போகணும்.

Saturday, September 20, 2008

தூக்கமா வருது. தூங்கப் போறேன்.

ரொம்ப நேரமா முழிச்சுக்கிட்டு பிலாக் எல்லாம் பாத்துட்டு இருந்தேனா...தூக்கமா வருது. தூங்கப் போறேன்.

Friday, September 19, 2008

நான், இட்லி வடை மற்றும் டெக்கான் கிரானிக்கிள்

கருத்து கந்தசாமி என்று தொடர்ந்து டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகையின் பாக்கெட் கார்ட்டூனை இட்லி வடை தன் பதிவில் போடுகிறது. ஒரு நன்றி கிடையாது. ஒரு கர்டஸி கிடையாது (ரெண்டும் ஒண்ணுதானா). அதனால் இட்லி வடையில் வரும் பதிவுகளை தலைப்புகளை மாற்றி என் பதிவாக இடையிடையே போடுவது என உத்தேசித்து இருக்கிறேன். இல்ல போடக்கூடாதுன்னு சொல்றவஙகளுக்கு என் பதில்: அவன நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்துறேன்.
இதுல இன்னா பிராப்ளம்னா இட்லிவடைக்காரன் எடுக்குறது எல்லாமே சுட்ட சமாச்சாரம். அதை திரும்ப ஒருக்கா சுட்டா என்னா சுடாட்டி என்னான்னும் இருக்கு. இதைப் பத்தி பதிவுலக நண்பர்கள் கருத்தைச் சொல்லலாம்.

Wednesday, September 17, 2008

காதலும் பெரியாரும்

காதல் பற்றி பெரியார் என்ன சொல்லி இருக்கிறார். காதல் என்ற உணர்வு உன்னதமானதா? அது புனிதத்தன்மை வாய்ந்ததா என்பது குறித்து குடியரசு தலையங்கத்தில் ஒரு உளவியல் கண்ணோட்டத்துடன் பெரியார் அந்தக் காலத்திலேயே (1931) நெத்தியடியாக எழுதியுள்ளார். அதை, காதல் எல்லாம் டுபுக்கு என்ற தலைப்பில் நேற்று நள்ளிரவில் பதிவாக போட்டுள்ளேன். அநேக வெளிநாட்டு தமிழர்கள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். காலையில் எழுந்திருந்து ஆபிஸிலும் வீட்டிலும் சோம்பல் முறித்துக்கொண்டிருக்கும் தமிழர்களும் இதைப் படிக்க வேண்டும் என்ற நல்நோக்கில் அதுகுறித்த அறிவிப்பு பதிவாக இதை வெளியிடுகிறேன்.

காதல் எல்லாம் சும்மா டுபுக்கு... பின்னுகிறார் பெரியார்

அன்பு,ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசகம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.
ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எது வரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயதில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும் பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மையும் நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழுக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும். அக் காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும்,
அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.
ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.
அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும் சுதந்திரத்தையும் சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகிறது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறுவிதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.
அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள் தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண் சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகிறதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.
ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டு பிடித்தார்களென்பதும் நமக்கு விளங்கவில்லை.
நிற்க, இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
இந்தப் படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில் கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல் தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேற எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.
எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தைத் திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.
அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.
உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு யார் என்று இவர்களில் ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமாரத்தி என்று சொல்லுகின்றாள். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?
நிற்க, அவன் தன்னைச் சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறுஜென்மத்தாலும்” இவனை விட்டுப் பிரியக்கூடாது என்று கருதி விடுகிறாள். நான்கு நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்றும் அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம்.இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா?அல்லது இருந்தாக வேண்டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும் மறுக்கும் தன்மையும் விளங்கும்.
இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இது போலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும் திருப்திக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவு தான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக்காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.
நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகிய பின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூடக் காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கி விடக்கூடிய காதல் குற்றமான காதலா?என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?
காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லஷியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியிலும் துன்பத்திலும் அழுந்த வேண்டியதுதானா? என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.
ஒரு ஜதைக் காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா? விரோதமில்லையானால் ஓருவர் ஞானியாகி துறவியாகிவிட்டால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக் விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அது போலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும் வெறுப்புக் கொள்வதும் பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?
உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஓரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்தத் தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்தத் தாசி கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியா? இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இது ஒத்த காதல் ஆகிவிடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளை விடச் சிறிது கூடச் சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும்.
அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்திவிட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்மென்று கருதி எப்படிப் பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அநேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் சதா கோவிலுக்குப் போவதும் பாட்டுக்கள் பாடி அழுவதும் வாயில் சிவ சிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்….

ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ.றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்.
ஆகவே, இதிலிருந்து நாம் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு விதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப் பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்.
(18.01.1931′குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்)

RESERVATION - Karunanidhi writes to Manmohan Singh

We have been very strongly opposing the concept of creamy layer, right from its inception. In fact, we have been insisting that no economic criterion by way of annual income of the parents of the students should be inserted for reservation to socially and educationally backward classes, as contemplated by the constitution of the India. Due to exclusion of creamy layer, about 400 seats in higher educational institutions remain unfilled during the current academic year. On this unfilled vacancies, the Supreme Court of India has recently held that there is no bar in filling these vacancies from among the students under the Open Competition category.
27% reservation to OBCs is not being implemented fully, only one third of the prescribed quota has been implemented, excluding the creamy layer. If these reduced number of vacancies originally meant for OBCs are filled from among the candidates of the Open Competition category, the OBCs are afraid that there will be a big setback to their right of reservation

Monday, September 15, 2008

இந்திய பதிவர்களிடம் ஒரு கேள்வி

அரசவை கவிஞர் போல அந்தஸ்து கொண்ட சிலர் ஒன்று குழுமி, ஒரு மாநில முதல்வரை சுமார் ரெண்டே முக்கால் மணி நேரம், நீ இந்திரன், நீ சந்திரன், உன்னிடம் இருக்கே பவர் அதுதான் பவர், அதை யாராச்சும் கட் பண்ண முடியுமா..நீ எந்திரிச்சா, தமிழ்த்தாய் எந்திரிச்சா மாதிரி...நீ எழுதுகோல் எடுத்தா தொல்காப்பியன் துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடுவான் .... என்கிற ரீதியில், கேட்கிற ஆளே வெட்கித் தலைகுனிகிற அளவுக்கு கவியரங்கம் என்ற பெயரில் புகழ்ந்து பாடுவார்களா? அதையும் ஆனந்தமாக ஒரு முதல்வர் ரசித்து மகிழ்வாரா? பொது நிகழ்ச்சியாக இது ஊடகங்களில் காட்டப்படுமா?
இந்தியா முழுமையில் இருந்தும் எழுதும் பதிவர்களிடம் இதை சீரியசாகவே கேட்கிறேன். எந்த மாநிலத்திலாவது இந்த மாதிரி ஒரு வடிவம் இருக்கிறதா?

உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் சர்வவல்லமை பொருந்திய மாயாவதி இருக்கிறார். அவருக்கு இப்படி ஜால்ரா கவியரங்கம் நடத்தப்பட்டிருக்கிறதா? மராட்டியத்திலே பைப் புகைத்துக்கொண்டு பந்தாவாக பால் தாக்கரே என்று ஒரு தலைவர் இருக்கிறார். அவரை புல்லரிக்க வைக்கிற மாதிரி கவியரங்கம் நடத்தப்பட்டிருக்கிறதா? முலாயம் சிங் யாதவுக்கு, நிதீஷ் குமார், லாலு, வசுந்தரா ராஜே சிந்தியா, சந்திர பாபு நாயுடு, தேவே கவுடா என்று நீள்கிற பட்டியலில் யாருக்காவது கவியரங்க கோலாகலம் நடத்தப்பட்டிருக்கிறதா?
தயவுசெய்து சொல்லுங்கள்.

Friday, September 12, 2008

கொச்சு கள்ளி....(ஓணம் ஸ்பெஷல்)

எனக்கு நிறைய கேரள நண்பர்கள் உண்டு. நண்பிகளும். அவர்களிடம் இருந்து சேர நன்னாட்டின் பலவித பண்பாட்டு, கலாசார விஷயங்களை கேட்டறிந்து வியந்திருக்கிறேன்.
குட்டிப்புரம் என்ற கேரளத்தின் அழகிய சிற்றூரைச் சேர்ந்த, அம்புலி என்ற அற்புத பெயர் கொண்ட ஒரு பேரழகி சில ஆண்டுகளுக்கு முன்பு என் ஸ்நேகிதியாக இருந்தாள். இப்போது அது முறிந்துபோன உறவு. பல கேரள அரசியல் விகடங்களை அம்புலி என்னிடம் கூறியிருக்கிறாள். அதில் ஒன்றுதான் ஒரு எம்எல்ஏவை பற்றிய கலக்கலான கதைகள். அந்த எம்எல்ஏவின் பெயர் இப்போது எனக்கு நினைவில் இல்லை. தவிரவும் கேரள அரசியலில் நான் வீக். இந்த எம்எல்ஏவின் (இப்போது மாஜியா என்பதும் தெரியாது) கோக்குமாக்குள் கேரளத்தில் பிரபலமாம். அதையட்டி பல இட்டுக்கட்டிய கதைகளும் சேர்த்து இந்த எம்எல்ஏ குறித்த ஜோக்குள் அங்கு படு பாப்புலர். மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ் வகையை போல.

அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இது:

எம்எல்ஏ ஒரு முறை சட்டைவாங்க துணிக் கடைக்கு போயிருக்கிறார். அங்கே அழகான இளம்பெண் ஒருவள் சேல்¢ஸ்கேர்ளாக இருந்தாள். சின்ன கட்டம் போட்ட வெள்ளை கலர் சட்டைதான் எம்எல்ஏக்கு தேவை. எனவே, அவர் விற்பனைப் பெண்ணிடம் இப்படிக் கேட்டிருக்கிறார்: 'கொச்சு கள்ளி... வயற்றில் உண்டோ?' உடனே அந்தப் பெண் பளார் என்று அவரை அறைந்து விட்டாளாம்.

மலையாள மொழி தெரிந்திருந்தால் இந்த ஜோக்கின் தாத்பர்யம் சரியாக புரியும். கொச்சு என்றால் சின்ன. கள்ளி என்றால் கட்டம். வொயிட் என்பதை கேரளத்தில் வயற் என்பார்கள். அவர் கேட்டது சின்ன கட்டம் போட்ட வொயிட் கலர் சட்டை இருக்கிறதா என்றுதான். அதன் இன்னொரு அர்த்தம், 'அடி கள்ளி உண்டாயிருக்கியா' என்பதை ஒத்திருந்ததால்தான் அந்த அறை கிடைத்ததாம்.

Monday, September 8, 2008

குமுதம் ஆசிரியருக்கு குட்டு ஞானக்கூத்தனுக்கு திட்டு

சின்னம்மா: எஸ்.ஏ.பி.

மணிமேகலை பிரசுரம், சென்னை-17, 1992.

"அறிஞரும் கவிஞருமான ஞானக்கூத்தன் அணிந்துரை அளித்தது நான் பெற்ற பேறு..." எஸ்.ஏ.பி.


ஞானக்கூத்தனின் 'அணிந்துரை'யிலிருந்து:

..............தொடர்கதையாக வெளிவந்த காலத்தில் ஏராளமானவர்கள் படித்து மகிழ்ந்த நாவல்தான் திரு. எஸ்.ஏ.பி.யின் சின்னம்மா....முத்தையா என்ற செல்வர் திடீரென்று இறந்து விடுகிறார். அதைத் தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற குடும்பத்தில் ஏற்பட்டவற்றை பதற்றமற்ற நடையில் சொல்கிறார் ஆசிரியர்.....13 வயதான மெய்யப்பன்தான் கதையில் முந்தித் தெரியும் பாத்திரமாக படைக்கப் பெற்றிருக்கிறான். கதையின் அரங்கில் முக்கியமாக வரும் இந்தப் பாத்திரத்தின் பின்னே அதன் சின்னம்மாவாக வரும் நளினி என்ற பாத்திரம் கிளைகளினால் மறைக்கப்பட்ட பழம் போல அமைந்திருக்கிறது. மெய்யப்பனின் பாத்திரத்தை ஆசிரியர் அக்கறையுடன் உருவாக்கியிருக்கிறார். மிகக் குறைந்த அளவே எழுதி பாத்திரங்களையும் நிலைமைகளையும் வாசகர் மனதில் உருவாகும் வகையில் அமைந்துள்ளது திரு. எஸ்.ஏ.பி.யின் எழுத்து. கதை அமைப்பு, பாத்திரப் படைப்பு, நடை முதலானவற்றில் துலாக்கோல் பிடித்திருக்கிறார் திரு. எஸ்.ஏ.பி.

------

நா. முத்துக்குமார் அப்பா மாதிரிதான் என் அப்பாவும். வீட்டில் பெரிய நூலகமே வைத்திருக்கிறார். எல்லா தமிழ் மாத, வார, இலக்கிய. அ- இலக்கிய பத்திரிகைகளின் முதல் இதழ் தொடங்கி அதன் மொத்தத் தொகுப்பு பைண்டு வால்யூம்களும் நூலகத்தில் உள்ளன. இன்னும்கூட அழகாகப் பராமரிக்கிறார். எனக்குத்தான் இதையெல்லாம் படிக்க ஆர்வம் இருப்பதில்லை. இன்று மாலை எதேச்சையாக ஒரு வால்யூமை எடுத்தேன். லயம். காலசுப்பிரமணியனை ஆசிரியராகக் கொண்டு பிரமிளின் எழுத்துகளை அதிகம் போடுவதற்காகவே நடத்தப்பட்ட இதழ். அதன் 14-வது இதழில் ஒரு பக்கத்தில் (பக்க நம்பரே கிடையாது) மேற்கண்ட சின்னம்மா நூலில் உள்ள அணிந்துரையை பிரசுரித்திருக்கிறார்கள். வேறு எந்த கமெண்டும் அதில் இல்லை. ஞானக்கூத்தனை கடுமையாக விமர்சித்தவர் பிரமிள். எஸ்.ஏ.பி.யை ஐஸ் வைப்பதற்காக இப்படி ஒரு வழிசல் விமர்சனத்தை ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார். எஸ்.ஏ.பி.யும் அவர் அணிந்துரை கொடுத்ததற்காக எப்படி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் பாருங்கள் என்று காட்டுவதற்காகவே இதை லயம் பிரசுரித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்பாடா...பதிவின் தலைப்பு ஜஸ்டிபை ஆகிவிட்டது.

Saturday, September 6, 2008

மெக்சிகோ சலவைக்காரி ஜோக் இதுதான்...

கேபிள் சேகர் என்பவர் சுஜாதாவின் ஒரு கதையை திருட்டுத்தனமாக எடுத்து குறும்படம் தயாரித்துவிட்டார் என்று பரிசல்காரன் என்பவர் ஒரு பதிவு போட்டிருந்தார். சுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்காட்டோம் என்ற தலைப்பில். அதற்கு வந்த பின்னூட்டங்களில் டிபிசிடி என்பவர், பலமுறை அழுத்தமாக சுஜாதாவால் சொல்லப்பட்ட மெக்சிகோ சலவைக்காரி என்ற ÔஆÕ நகைச்சுவைத் துணுக்குக்கு சுஜாதா உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை என்று கூறியிருக்கிறார்.
அது சம்பந்தமாக ஒரு விளக்கம்:
அந்த ஜோக்கை எந்த இடத்திலும் சுஜாதா அழுத்தமாகவே கூறவில்லை. வசந்தோ இன்னபிற கேரக்டரோ மெக்சிகோ ஜோக்கை சொல்ல வரும். ஆனால் அது சொல்லப்படாமல் விடப்படும். கடைசிவரை அந்த சஸ்பென்ஸை நீடிக்கச் செய்து, எந்த கதையிலாவது வெளியிட்டுவிட மாட்டாரா என ஏங்க வைத்திருப்பார் சுஜாதா. நல்ல உத்தியாகவும் அதை பயன்படுத்தினார்.

அது இருக்கட்டும். மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை இப்போது நான் சொல்கிறேன்.

மெக்சிகோவில் ஒரு சலவைக்காரி இருந்தாள். செம கட்டை. எப்போதும் ஆற்றில் கருமமே கண்ணாக துவைத்துக் கொண்டிருப்பாள். அவளது அழகில் மயங்கி பலபேர் பின்பக்கமாக வந்து ஜோலியை முடித்துச் சென்று விடுவார்கள். அவள் மறுப்பேதும் சொல்வதில்லை. ஒரு நாள் ஆறு பேர் இப்படி முடித்துச் சென்றதுமே பக்கத்தில் இருந்த கழுதைக்கும் ஆசை வந்துவிட்டது. அதுவும் போய் முடித்தது. அப்போது சலவைக்காரி சொன்னாளாம். அந்த ஏழாவது ஆள் மறுபடியும் வாங்க.

Tuesday, September 2, 2008

வலையுலக ஜே.கே. ரித்தீஷ்

ஏன் இவ்வளவு நாளாக ஆளைக் காணோம்?

நெடிய சுற்றுலா போயிருந்தேன். மலேசியாவுக்கு. கேமரான் மலை, பினாங்கு தீவுகள், கோலாலம்பூர் என்று உல்லாசத் திரிதல். அற்புத மது ரகம். சீன, மலேய, இந்தோனேசிய பெண்கள் பலருடன் சினேகம். பிளாக் பக்கம் வரவே இல்லை. ஒன்றரை மாதத்துக்குப் பின் திரும்பி வந்து பார்த்தால்....

பார்த்தால்?

அவ்வளவு டல். ஒரு பத்து பதினைந்து பேர் மட்டும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு மாறி, மாறி ராவடி. மாத்தி மாத்தி முதுகுசொறி பின்னூட்டம். அலுப்பாக இருக்கிறது. சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என பேரறிந்த எழுத்தாளர்கள் வந்து சுவாரஸ்யமும் காத்திரமும் மிகுந்த பதிவுகள் போடுவதால் பல ஸ்டீரியோடைப் பதிவர்கள் சோபை மங்கி போய்க் கிடக்கிறார்கள். எழுத்தாளர்களின் இணையத்துக்கு வலியப் போய் நல்லா இருந்ததுங்க என்று ஒரு லெட்டர் போட்டு பாராட்டிவிட்டு, கூடவே தன் இணைய முகவரியும் கொடுத்து விடுகிறார்கள். விளம்பரம் கிடைக்கும் ஆசையாக இருக்கும். பாவமாக இருக்கிறது.

இப்படி இருந்தால் இணைய தமிழ் அடுத்த கட்டத்துக்கு போகுமா?

ஆனந்தவிகடனில் என் எழுத்து வந்திருக்கு. என் போட்டோ வந்திருக்கு என்று புளகாங்கிதம் அடைந்து அல்லவா பதிவு போடுகிறார்கள். அச்சு உலகைத் தாண்டியவர்கள் என்று ஜம்பமாக இருக்க வேண்டியவர்கள் இப்படி அசடு வழிந்துகொண்டு, அச்சுவேட்கையர்களாக இருக்கும்போது அடுத்த கட்டமாவது மண்ணாங்கட்டியாவது.

சமீபத்தில் படித்து நொந்த பதிவு?

ஆனந்த விகடன் அட்டைப்படத்தை பாத்து நானே வரைஞ்சது என்று ஒருவர் அச்சமூட்டும் பெண் படத்தைப் போட்ட பதிவு. அதற்கு, மூக்கு சரியா வந்திருக்கு. பட் உதடுதான் பெரிசா போச்சு என்று சீரியசாக பின்னூட்டம் போட்ட சில பதிவர்கள். இதையும் சூடான இடுகைகள் பகுதிகள் போட்ட தமிழ்மணர்கள். இவர்களுக்கு ரெண்டு சூடான இடுகை கொடுத்தால் என்ன என்று தோன்றியது.

அசத்தியது?

பெரியாரின் வானொலி பேட்டியையும் அவரது காரைக்குடி, கும்பகோண பொதுக்கூட்ட உரையையும் ஒலிப்பதிவாக போட்ட அந்த பதிவு. இப்போது தட்டச்சு செய்கையில் பதிவின் பெயர் மறந்துவிட்டது. மன்னிக்கவும். பெரியாரின் குரலைக் கேட்டது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

வலையுலக ஜே.கே. ரித்தீஷ் என்று யாரைச் சொல்லலாம்?

லக்கிலுக்

வெளிநாட்டு பயண அனுபவ பதிவு போடுவீர்களா?

மாட்டேன். (இப்போதைக்கு).

விநாயகர் சதுர்த்தி?
அது விடுமுறைநாள் ஆயிற்றே.

ங்கொய்யால...நீ பெரிய புல்டாக்கா?

................................

Thursday, June 26, 2008

காம அரசியலை முன்வைத்து

காமம் என்றால் என்ன? ஆணுடலும் பெண்ணுடலும் இணைவது. அதாவது பெண்
ண¤ன குறிக்குள் ஆணின குறி பொருந்தி, உள்சென்று, முன்பின் இயக்க அசைவுகள் மூலமாக ஆணின விந்துப் பையில் இருந்து உருவாகும் விந்தணுக்களை பெண்ணின கருஉருப் பாதைக்குள் செலுத்தும் செயல். இதுதொடர்பாக சில முன் விளையாட்டுகளும் உள்ளன. அவை முத்தம், வருடுதல், தடவுதல், கிள்ளுதல் என்பதான பல்வகை அம்சங்கள் கொண்டவை. மரபுசார் புணர்ச்சியைப் போல் வரம்புகடந்த புணர்ச்சி நிலைகளும் உள்ளன. இவ்வளவுதான் காமம். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து காம அரசியலுக்குள் புகுந்து புறப்படுகிறேன் பேர்வழி என்று பத்துப்பாடடு, எட்டுத்தொகை காலத்துக்குள்ளும், மக, மவுரியப் பேரரசுகளின் ஊடாகவும் சமண, பவுத்த மார்க்க வழியாக தவ, விரத, நோன்பு நிலைகளை முன்னெடுத்தும் பாலியல் வரலாறு அதன் நுண்ணரசியல் செயல்பாடு என சில பதிவர்கள் மிக நீண்ட பதிவிட்டு, என¢ போன்று வாழ்வை ஒவ்வொரு நிமிடத் துளியும் சுவைத்து களிப்பவர்களை கடுப்பேற்றுகிறார்கள். இதுபோன்ற காம அரசியல் பதிவுகளைப் படித்தால் உங்களுக்கு குறி தளர்ந்து, சுருங்கி, அது விவசாயிகளின் நண்பன்Õ போல் ஆகிவிடும் என்று எச்சரிக்கிறேன். பெண் பதிவர்களுக்கு சாபம் விடக்கூடாது என¢ற நல்நோக்கில் நாகரீகம் கருதி சொல்லாது விடுகிறேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ங்கொய்யால...லீவுல டூரு போய் முடிச்சிட்டு வந்து பிளாக்குகளைத் தொறந்து பார்த்தா ஒரே காமக் கிடங்கா கெடக்குது. அந்த வெறுப்பில் வந்த பதிவு இது. இதற்கான மூலப் பதிவு என்ன என்பதை நீங்களே ஒரு பைத்தியக்காரனைப் போல் தேடிப் பிடித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Thursday, June 12, 2008

தசாவதாரம் பாத்துட்டேளா....

இன்றைய தேதியில் மிக முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருவது, தசாவதாரம் படத்தின் கதை என்ன என்பதுதான். நேற்றே பிரிவியூ பார்த்துவிட்டு கிறங்கிப் போய் வந்த நண்பர்கள் சிலரிடம் நேர் பேச்சிலும் தொலைபேசி வாயிலுமாகக் கேட்டேன். கதைச் சுருக்கம் சொல்லுங்கள் என்று. யோசித்துச் சொல்கிறோம். 16 மணி நேரம் டைம் கொடு என்கின்றனர். 17&ம் நூற்றாண்டு, ஜார்ஜ் புஷ் என்று ஒரு இளம் நண்பி ஏதேதோ புலம்பிக் கொண்டுள்ளார். என் பிரார்த்தனை எல்லாம் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாணு போல் ஆகிவிடக் கூடாது என்பதுதான். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஒரு வாரம் லீவ். கேரளக் கடற்கரை நகரங்கள், வயநாடு வழியாக மைசூர், குடகு வரை சென்று வர ஒரு டூர் ஏற்பாடு. வருவதற்குள் யாராவது கதை கண்டுபிடித்து பதிவு போட்டு வையுங்கள். வந்து பார்த்துக் கொள்கிறேன்.

Tuesday, June 10, 2008

கக்கூஸ் சுவத்ல எழுதறவன்தான் அனானி

ஊரில் சினிமாத் தியேட்டர் மற்றும் பஸ் நிலைய கழிப்பறைச் சுவர்களில் 'கலாவுக்கும் கோபுவுக்கும் கள்ளக் காதல்', 'ஒண்டுக்கிருந்துவிட்டு ஒருமுறை சுண்டாவிடில் நிண்டொழுகுமாம் சலம்', 'அமிர் எங்கள் உயிர், நவம் எங்கள் மயிர்' என்றெல்லாம் சொற்களை எழுதுவதில் இன்பமடையும் கூட்டமொன்று உண்டு. இது ஓர்வகையான மனப் பிறழ்வும்கூட. புலம்பெயர்ந்த நாடுகளிலுள்¢ள பொதுக் கழிவறைகளில் இவ்வாறெல்லாம் எழுதி இன்பமுற வாய்ப்பில்லாததால் நீங்கள் இணையதளங்களில் பின்னூட்டம் எழுதி மகிழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களையிட்டுக் கோபப்படுவதைக் காட்டிலும் உங்கள் மீது இரக்கம்கொள்வதே சரியாயிருக்கும்.
மேற்கண்ட பத்தி, யமுனா ராஜேந்திரன் என்பவரை தும்பு தும்பென தும்பிக் கிழித்து ஷோபாசக்தி எழுதிய கட்டுரையில் உள்ள ஒரு பகுதி. முகத்தை மறைத்துக்கொண்டு என்மீது மட்டுமல்லாமல் யமுனா மீதும் மற்றவர்கள் மீதும் ஆதாரமற்ற பின்னூட்டக் கற்களை எறிபவர்களுக்கு ஒரு வார்த்தை என்று தொடங்கி, அவதூறு அனாமிகளுக்கு இந்த சாட்டையை வீசியிருக்கிறார் ஷோபாசக்தி.
அவர் எழுதிய கட்டுரைக்கான சுட்டியைக் கொடுக்கும் அளவுக்கு நுட்பம் எனக்கு இன்னும் கணிணியில் கைவரப்பெறவில்லை. எனவே நீங்களே தேடிக்கொள்ளுங்கள். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

Saturday, June 7, 2008

முதல் உலகப் போர்னா இன்னா....

வீக்எண்ட். நல்லவேளை நண்பர் கூட்டத்தில் இருந்து தப்பி விட்டேன். வீட்டில் அம்மாவும் இல்லாததால் சர்வசுதந்திரம். தணுத்துக் குளிர்ந்த பீரை உள்ளிறக்கிக் கொண்டே கணிணி இயக்கிக் கொண்டிருந்தேன். நாலாம் வீட்டு மாமி உள்ளே வந்தார். எனக்கு ரொம்ப நெருக்கம். என்னடா பண்ணிட்ருக்கே என்றார். பிளாக் விவரம் எல்லாம் தெரியாதவர். சும்மா கட்டுரை எழுதிப் பாக்றேன் என்றேன். எங்கே காமி. மிடில் கிளாஸ் கே.கே வை காண்பித்து வைத்தேன். பிலுபிலுவென பிடித்துக்கொண்டார். என்ன எழவுடா இது. இப்படியெல்லாமா எழுதறது. நாலு விஷயம் தெரிஞ்சுக்கற மாதிரி எழுது. ஜென்ரல் நாலெட்ஜ் வளக்குற மாதிரி எழுதணும்டா என்று தொடங்கி ஏகப்பட்ட லெக்சர் கொடுத்து கிளம்பிவிட்டார். மனதே வெறுத்துவிட்டது. சரி ஒரு சேஞ்சுக்காக நமக்கு பிடித்த டஜன் பாயிண்ட் கணக்கை வைத்து ஒரு சீரியஸ் பதிவு போடலாம் என தீர்மானித்து விட்டேன். மாமிக்காக ப்ளீஸ் மன்னித்து விடவும்.

உலகின் மகா சீரியஸ் விஷயமாகி, இப்போது கிட்டத்தட்ட மறந்தே போய்விட்ட முதலாம் உலகப் போர் பற்றி நண்பர்களே இப்போது பார்க்கலாமா.... (தோரணை வந்துவிட்டது பாருங்கள்).

முதல் உலகப் போர் (1914 - 1918)

1. ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாந்தும் அவனது மனைவியும் 1914 ஜுன் 18ல் காரில் போகும்போது செர்பிய நாட்டவனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் செர்பியா மீது ஆஸ்திரியா படை எடுத்தது.

2. நாடு பிடிக்கும் வெறியில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக போரில் குதித்தது. ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் இணைந்தன.

3. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா ஆகியவை போரில் ஈடுபட்டன.

4. 1914 ஆகஸ்ட் 4ல் முதல் உலகப் போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ரகசியமாக பிரான்ஸ், பிரிட்டனுக்கு ஆதரவளித்தது. இதனால் கடுப்பான ஜெர்மனி, அமெரிக்க கப்பல்களை குண்டுபோட்டு மூழ்கடித்தன. இதனால் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக¢கா போரில் குதித்தது.

5. நீர் மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மூலம் நேச நாடுகளை துவம்சம் செய்தது ஜெர்மனி.

6. போர்க்காலத்தில் ரஷ்யாவில் புரட்சி வெடித்து லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யூனிச அரசு உதயமானது. 1917ல் ஜெர்மனியுடன் லெனின் அரசு சமாதான உடன்படிக்கை செய்து போரில் இருந்து விலகியது.

7. போரில் ஜெர்மனி விஷ வாயுவைப் பயன்படுத்தி உலகை அதிர வைத்தது.

8. முதலில் ஜெர்மனிதான் வெற்றிகளை ஈட்டி வந்தது. ஆனால் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பெரும் பலத்துடன் ஜெர்மனியை நோக்கி முன்னேறின.

9. இதனால் ஜெர்மனி மக்கள் அரண்டுபோய், மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் இறங்கினர். சொந்த மக்களை ராணுவத்தைக் கொண்டு சுட்டுக் கொல்லவைத்தார் கெய்சர்.

10. 1918 நவம்பர் 11-ம் தேதி ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்குள் நுழைந்தன நேச நாடுகளின் படைகள். ஜெர்மனி சரண் அடைந்தது. மன்னர் கெய்சர் ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

11. முதல் உலகப்போர் மொத்தம் 1561 நாட்கள் நடந்தது. 2 கோடி பேர் இறந்தனர். போர் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலுக்கு 2 கோடி மக்கள் மடிந்தனர்.

12. போருக்கு காரணமான ஆஸ¢திரியா பல்வேறு இன மக்களைக் கொண்டது. முதல் உலகப் போருக்கு பிறகு ஆஸ்திரியா துண்டுதுண்டாகச் சிதறியது.

ஸ்ஸ்ஸ்...அப்பா...எவ்வளவு சீரியஸான பதிவு. ச்ச்சீ...போங்க எனக்கே வெக்கமா இருக்கு.

Friday, June 6, 2008

மிடில்கிளாஸ் கேனச்சிகளை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள்

1. சிக்னலில் நிற்கும்போது ஸ்கூட்டி இன்ஜினை ஆப் செய்பவள்.

2. கோயில் சிதறு தேங்காயை காலை சட்னிக்கு உபயோகிப்பவள¢.

3. தன் பிறந்தநாளுக்கு ஐபாட் பரிசு வாங்கி, அதை வாங்கித் தந்தவன் பிறந்தநாளுக்கு யாஹ§ மெயிலில் கார்டு அனுப்புபவள்.

4. அட்சய திரிதியைக்கு ஜி.ஆர். தங்கமாளிகையில் கால்பவுன் மோதிரம் வாங்குபவள்.

5. பாண்ட்ஸ் பவுடர் பூசுபவள்.

6. சினிமா இடைவேளையில் பாப்கார்னும் கோன் ஐஸ§ம் மறக்காமல் கேட்பவள்.

7. போத்தீஸில் 800 ரூபாய்க்கு சுடிதாரும் ரங்கநாதன் தெருவீதியில் பத்து ரூபாய்க்கு மூணு பேண்டீஸ§ம் வாங்குபவள்.

8. ஆண் நண்பர்களுடன் பைக்கில் போகும்போது ஹேண்ட்பேக் இன்னபிற வஸ்துக்களால் நடுவில் தடுப்பரண் அமைப்பவள்.

9. இளநீர் வாங்கி தண்ணீர் குடித்தே வயிறு நிரம்பினால், தேங்காய் விள்ளல்களை பொட்டலம் கட்டச் சொல்பவள்.

10. ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டை கைப்பையில் வைத்திருப்பவள்.

11. வீட்ல இருக்கும்போது போன் பண்ணாதீங்க ஆத்தா வய்யும் என்பவள்.

12. கன்னத்தில் மட்டும் முத்தம் இடுபவள்.

Thursday, June 5, 2008

மிடில்கிளாஸ் கேனயர்களை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள்

1. பனியன் போட்டிருப்பவன்.

2. ஹமாம¢ சோப் தேய்ப்பவன்.

3. சட்டைப் பையில் நீலக்கலர் மூடி தெரியும்படி ரெனால்ட் பேனா வைத்திருப்பவன்.

4. பெல்ட்டில் உறை போட்டு செல்போன் வைத்திருப்பவன்.

5. டிசம்பர் கடைசியில் டைரி, காலண்டர் கிடைக்குமா என பார்ப்பவரிடம் எல்லாம் கேட்பவன்.

6. சலூனில் கைகளை உயர்த்தி கக்கம் சிரைக்கச் சொல்பவன்.

7. பைக்கின் சைடில் பெட்டி வைத்திருப்பவன்.

8. பிஸ்லரி தண்ணீர் தீர்ந்ததும் பாட்டிலை மறக்காமல் வீட்டுக்கு எடுத்து வருபவன்.

9. ரிமோட்டுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பவன்.

10. 50 கட்டுரை எழுதியதற்கு எல்லாம் புளகாங்கிதம் அடைந்து பதிவு போடுபவன்.

11. அதற்கு உருகி உருகி பின்னூட்டம் இடுபவன்.

12. என் மகன் எஸ்எஸ்எல்சியில் 405 மார்க் என்று எஸ்எம்எஸ் அனுப்புபவன்.

Sunday, June 1, 2008

இலங்கை சாராயத்தின் அடிமை நான்

நேற்றிரவே இப் பதிவைப் பதிய நினைத்தேன். ஒரு நாள் தாமதம். நாள் ஒன்று நீண்டிருப்பினும் நினைக்குந்தோறும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவே அதன் மகாத்மியமாகவும் இருக்கிறது. திரைத்துறை சார்ந்த நண்பன் ஒருவன் நாளிதழில் சுருட்டி வைத்திருந்த ஒரு போத்தலைக் கொடுத்தான். இலங்கைச் சாராயம் என்றான். சாராயம் குறித்து இதுவரை எனக்கு ஒரு பயப்பிராந்தியே இருந்தது. இந்திய தயாரிப்பு மற்றும் விதேச தேசத்தின் முதன்மையான மதுக்கள் அனைத்தையும் பருகி இருக்கிறேன். எனினும் சாராயம் மீது ஓர் அச்சமே இருந்தது. குறிப்பாக அதன் நெடி. பிறகு அது தயாரிக்கும் விதம் குறித்து சொல்லப்படும் கதைகள். பேட்டரிக்கள், அழுகிய பழம், விஷ ஜந்துகள் இத்யாதி. அதனால் நெருங்காதே இருந்தேன்.
தயக்கத்தோடுதான் நாளிதழ்ச் சுருளைப் பிரித்தேன். நீண்ட வெண் பாட்டில். உள்ளே படிகத் தெளிவில் திரவம். பெயர் வைற் டயமண்ட். குவளையில் சிறிது நிரப்பி, தூய நீர் கலந்து பருகினால்...ஆஹா அற்புதம். அதன் வாசனை. நேர்த்தியாய் நெஞ்சுக் குழியில் பாய்ந்து இறங்கும் சுகம். மெலிதாய் கிளர்ந்து பரவும் போதை.
நன்றாய் இருந்தது என்பது சாதாரண வார்த்தை. வேறு தெரியவில்லை. எனவே நன்றாய் இருந்தது. போத்தலில் இருந்த தமிழ் வாசகம் இன்னும் போதையேற்றியது. வைற். சாராய ஸ்ட்ரெங்க்த் அளவும் குறிக்கப்பட்டிருந்தது. அதன் தமிழ் -சாரம். சாராயத்தின் சாரம். போதை ஏறாதா என்ன.
இலங்கையின் தமிழ் மீது எனக்கு மாறாக் காதலே உண்டு. என் கனவு பூமி அது. இத்தனைக்கும் நான் ஒருமுறை கூட அங்கு சென்றது இல்லை. ஆனால் எனக்கு நெருங்கிய தேசமாகவே அது மனதுக்குள் கிடக்கிறது. சிறு பிராயத்தில் இலங்கை வானொலி என் வாழ்வில் ஓர் அங்கம். புலர்பொழுதிலே பொங்கும் பூம்புனல் எனத் தொடங்கும் அதன் ஒலியலைகள் நாள் பூராவும் எங்கள் வீட்டில் அதிர்ந்து கொண்டேயிருக்கும். பிறந்த நாள் வாழ்த்துக்காக அம்மா, அம்மம்மா, அப்பப்பா, தம்பி, மாமா என்று மொத்தக் குடும்பமும் வாழ்த்திக் கொண்டிருக்கும். இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் புகழ்பெற்றது. போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று கோபால் பல்பொடி விளம்பரங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கும். இரவின் மடியில் தாலாட்டைக் கேட்டுத்தான் தூங்குவோம்.
அப்போது வந்த, எல்லோரையும் ஈர்த்த வானொலி விளம்பரம் ஒன்று கூட நினைவுக்கு வருகிறது. அங்கிள் எனக்கு மனசே சரியில்லை என்று மழலையில் ஒரு குழந்தை கொஞ்சிச் சொல்லும். மனசு சரியில்லை என்பது பெரியவர்களுக்கான வார்த்தை. அதை மழலைக் குரலில் கேட்கும்போதே மனது உருகிவிடும். அடுத்த நிமிடமே கணீர்க்குரலில் ஒருவர் சொல்வார், அப்படிச் சொல்லவேணாம் புள்ள ...ஸ்டார் டொபி சாப்பிடுங்கோ என்று. ஞாபகத்தில் இருந்து சொல்கிறேன். சரியான விளம்பர வாசகம் தெரியவில்லை.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் எனக்குப் பிடித்த மற்றொன்று பொப்பிசைப் பாடல்கள். பாப் பாடல்களைத்தான் அப்படிச் சொல்வார்கள். தமிழ்நாட்டின் பாப் பாடல்கள் காது கொண்டு கேட்கச் சகியாது. ஆனால் இலங்கை பொப்பிசைப் பாடல்கள் ரெஹ்னாவின் அம்பர்லா கேட்ட மயக்கத்தைக் கொடுக்கும்.
சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. சின்ன மாமியா உன் சின்ன மகளெங்கே பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ. மற்றொன்று அறிவுரைப் பாடல். கள்ளுக்கடைப் பக்கம் போகாதே. காலைப் பிடித்து கெஞ்சுகிறேன். கண்கள் வறண்டிடும். கைகால் தளர்ந்திடும். நெஞ்சும் உலர்ந்திடும் இந்தக் கள்ளாலே. ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருக்கும்.
திரைப்பாடல்களின் முதல் பத்து வரிசைப்படுத்தல்கள் நிகழ்ச்சியை
இலங்கை வானொலியில்தான் முதலில் செய்தார்கள். இன்றைய தமிழ் தொலைக்காட்சிகளின் கிட்டத்தட்ட அத்தனை நிகழ்ச்சிகளும் இலங்கை வானொலியின் காப்பிதான்.
இன்னும் நினைவு எங்கெங்கோ செல்கிறது. சாராய மயக்கத்தால் கட்டுரை நான்-லீனியராக ஆகிவிடக்கூடும். முடித்துவிடலாம். இந்த நேரத்தில் தமிழக, கர்நாடக எல்லைப் பகுதிகளில் விஷச் சாராயம் குடித்து பலியான 150-க்கும் மேற்பட்ட அந்த கூலித்தொழிலாளிகளின் நினைவு வந்து நெஞ்சை அறுக்கிறது. மதுபான பெருமுதலைகளின் கொள்ளை லாபத்துக்காக இங்கே அரசு, அடிமட்ட கூலிகளுக்கு நல்ல சாராயம் தருவதற்கான கதவை அடைக்கிறது. அவர்களை விஷச் சாராயத்தைத் தேடிப் போக வைக்கிறது. இதற்கு என்ன மாற்று. புரியவில்லை. குடிகாரன் அறிவுரை கூறுவதும் தவறு. வணக்கம்.

Wednesday, May 28, 2008

பிரமிள், அசோகமித்திரன் மற்றும் சாவி

என் நட்பு வட்டம் பெரிது. ஆனால் அவர்களுடன் அடிக்கடி அளவளாவி இன்புற்றிருக்கத்தான் இப்போதெல்லாம் முடிவதில்லை. நேரம், காலம் இல்லாது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்தாக வேண்டிய என் பணிச்சூழல் இதற்கு காரணம். நெடுநாட்களுக்குப் பிறகு கடந்த ஞாயிறு நண்பர்களோடு இணைய சந்தர்ப்பம் கிடைத்தது. நீலாங்கரைக்குப் பக்கம் சவுக்குத்தோப்பில் அழுந்திய நண்பனின் பண்ணை வீடு. நீச்சல்குளம். மது. ஸ்பானிய பாணி அவித்த மீனின் விள்ளல் என களைகட்டியது. நண்பர் கூட்டத்தில் ஒரு இலக்கிய டிகால்டியும் இருந்தது. எங்கள் வயதுக் குழுவைக் கடந்த மூத்த தலைமுறை ஆளை டிகால்டி என்று செல்லப் பெயர் சொல்லி அழைப்போம். இலக்கியர் என்பதால் படைப்பாளி என்றெல்லாம் அவசரப்பட்டு தீர்மானித்து விடாதீர்கள். நல்ல வாசகர் (என்று சொல்லிக் கொள்வார்). அவரைத் தவிர்த்து அந்தக் கூட்டத்தில் எனக்குத்தான் சொற்ப இலக்கிய அறிவு என்பதால் அடிக்கடி பலிகடா ஆவதும் நான்தான். பெண்நட்புகள், பல்நாட்டு உணவுகள், பங்குச்சந்தை, நிலம், கிரிக்கெட், மெட்டல் ராக் இசை, சுற்றுப்பயணம், ஸ்காண்டிநேவியன் நாடுகள் ஆகியவைதான் எங்கள் விவாதத்தில் பொதுவில் வரும் விஷயங்கள். அதனால் இலக்கியருக்கு தன் மேதமையைப் பறைசாற்ற சந்தர்ப்பமே வராது. கடைசியில் சிக்குவது நான்தான். இம்முறையும். மித போதை, நீலநிற நீச்சல்குள நீரின் குளிர்மைக்கு இடையே இலக்கியர் இட்ட சவரக் கத்தி விஷயங்களில் என்னை ஈர்த்த சிலவற்றை மட்டும் இங்கு தருகிறேன்.


கவி மேதை பிரமிளுக்கு குறும்பும் அங்கதமும் கிண்டலும் அதிகமாம். உண்மையான அக்கறை கொண்ட புதிய, இளைய வாசகர் என்றால் இறங்கிவந்து பேசுவார். அதேநேரத்தில் அரைகுறைகள் தங்களை மேதையாகக் கருதி ஏதாவது உளறிவைத்தால் கிழித்து தொங்கவிட்டுவிடுவார். கிண்டல் என்றே தெரியாத வகையில் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவாராம்.
ஒருமுறை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு கடையில் அசோகமித்திரன் படம் போட்ட ஒரு புத்தகமோ, பத்திரிகையோ இருந்ததாம். அதை உற்றுப் பார்த்த பிரமிள், நண்பரிடம் இப்படிச் சொன்னாராம்.

"அசோகமித்திரன் போலவும் இருக்கிறார். அழகாகவும் இருக்கிறார்"


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தினமணிகதிரில் அசோகமித்திரனின் தொடர்கதை வந்துகொண்டிருந்தது. கதை வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தினமணிகதிர் ஆசிரியர் குழுவில் மாற்றம். சாவி ஆசிரியர் ஆகி விட்டார். சுத்த இலக்கியப் பிரதிகள் என்றால் சாவிக்கு எட்டிக்காய். சீக்கிரம் தொடரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று உத்தரவிட்டார். உதவி ஆசிரியர் ஒருவர், தயங்கி தயங்கி விஷயத்தை அசோகமித்திரனிடம் சொன்னார். அசோகமித்திரனுக்கு கோபம். ஆனால் தன்மையாகத்தானே காட்டுவார். எதுக்கு சீக்கிரம். இந்த வாரத்தோடேயே நிறுத்திடறேன் என்று சொல்லி, முற்றும் போட்டுவிட்டாராம்.
அந்த வாரக் கதை இப்படி முடிந்தது.

அவன கதவை இழுத்துச் சார்த்தி பூட்டு போட முயன்றான். ஆனால் எவ்வளவு முயன்றும் பூட்ட முடியவில்லை. பூட்டு என்னவோ சரியாகத்தான் இருந்தது. சாவி தான் சரியில்லை.


---&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. வேண்டுமானால் சொல்லுங்கள். அவ்வப்போது ஒரு பதிவாகப் போட்டு விடுகிறேன்.

Saturday, May 24, 2008

இன்ஜினியரிங் படிச்சு வீணாப் போற பய புள்ளைகளுக்காக

இன்ஜி கவுன்சலிங், ஜூலை 11ம் தேதி தொடங்குகிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 3ம் தேதி.
ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண் அளிக்கப்பட்டு, 26ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டு கவுன்சலிங், ஜூலை 3ம் தேதியும், தொழிற்கல்வி பாடத்திட்ட மாணவர்களுக்கான கவுன்சலிங் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையும் நடக்கிறது. 9ம் தேதி வெளிமாநில மாணவர்களுக்கும், 10ம் தேதி ஊனமுற்றோருக்கும் கவுன்சலிங் நடக்கும்.
பொதுப்பிரிவு பாடத் திட்டத்துக்கான கவுன்சலிங், ஜூலை 11ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன.

இனி மெடிக்கல்காரவுகளுக்கு...
மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்பு ஜூன் 1ல் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் 3ம் தேதி முதல் 17ம் தேதி வரை வழங்கப்படும். ரேண்டம் எண் 16ல் வெளியிடப்பட்டு, 28ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
முதல்கட்ட கவுன்ச-லிங் ஜூலை 4ம் தேதி தொடங்கி 11ல் முடிகிறது. முதல்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் ஜூலை 21.
ஆகஸ்ட் 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இரண்டாவது கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 25ல் தொடங்கி 28ல் முடிகிறது. இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 1,645. இதில் 15 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீடு ஆகும். முஸ்லிம்களுக்கு 49 இடங்களும், கிறிஸ்தவர்களுக்கு 49 இடங்களும் ஒதுக்கப்படும்.

Friday, May 23, 2008

லட்சுமிராய் கழுத்தில் காமக்கடி

நம் சென்னை சூப்பர் கிங்ஸ§க்காக ரூ. 6 கோடி கொடுத்த வாங்கிய அடிமை டோனியுடன் லட்சுமிராய் சுத்துவது பழைய கதை. ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணியதும் பழைய கதை. சென்னையில் மேட்ச் நடக்கும்போது சேப்பாக்கம் வந்து லட்சுமிராய் உற்சாகமூட்டுவது வழக்கம். ரெண்டு நாள் முன்பு ராயல் சேலஞ்சோடு சென்னை மோதியபோதும் வந்தார். நச் ஜீன்ஸ், அழகிய டிசர்ட், வேலைப்பாடமைந்த பெல்ட், விரிந்த கூந்தல் என கலக்கினார். ஆனால¢ முக்கியமான ஒன்றை டெக்கான் க்ரானிக்கிள் பத்திரிகை படம் பிடித்து, எங்கே அதை மிஸ் பண்ணி விடுவோமோ என்று அதற்கு ரெட் ரவுண்டும் போட்டுக் காண்பித்திருக்கிறது. அன்று சேப்பாக்கம் கிரவுண்டுக்கு வந்த லட்சுமிராயின் கழுத்தில் லவ்பைட் எனப்படும் காமக்கடியின் சிவப்புத் தடம் இருந்ததாம். அதை மேக்கப் கொண்டு மறைக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றாமல் அப்படியே வந்துவிட்டாராம். கரிசனத்தோடு எழுதியிருக்கிறது டி.சி. தமிழ்ப் பத்திரிகைகளின் தாரதம்மியத்தைப் பற்றி கொதித்துப் போய் எழுதிக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

Tuesday, May 20, 2008

பூங்கோதைக்கு பதில் கீதா ஜீவன்

நம்ம பையனை கொஞ்சம் லஞ்ச கேஸ்ல இருந்து கழட்டி விட்ற மாட்டீகளா என்று லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயாவிடம் போனில் பேசினார் சமூகநலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. அது டேப் ஆகிவிட்டது. பாலிடிக்ஸ் சுனாமி சுப்பிரமணியசாமி அதை வெளியிட்டு கலங்கடித்தார். சட்டசபையில் மேட்டர் வந்தது. வேறு வழி இல்லாததால் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார் பூங்கோதை. அமைச்சர் பூங்கோதை செய்தது வெட்கக்கேடான செயல் என்று கூறிய கருணாநிதி, பூங்கோதையின் ராஜினாமா என் பரிசீலனையில் இருக்கிறது என்றார். இதைத் தொடர்ந்து கழுத்து, முதுகு வலிக்காக ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி நேற்றுதான் டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில், பூங்கோதை மேட்டர் என்னாச்சு என்று கேள்வி எழுப்ப, அதற்கு இன்று காலையே விடை கிடைத்துவிட்டது.
பூங்கோதை ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டது. அவரது சமூகநலத்துறை, கால்நடைத்துறை அமைச்சராக இருந்த கீதா ஜீவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கீதாவின் கால்நடை, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு கூடுதலாக தரப்பட்டிருக்கிறது.
கீதா ஜீவனுக்கு இது புரமோஷனா, டிபுரமோஷனா. சமூகம், கால்நடை இதில் எது சிறந்தது. லஞ்ச லாவண்யத்தில் திளைத்த பழைய அரசு அதிகாரி டிகால்டிகள் யாராவது பதில் சொல்லவும்.

Monday, May 19, 2008

கோயிலில் ஜெயலலிதா டான்ஸ்

சுற்றுலாவுக்காக கோத்தகிரி போயிருப்பீர்கள். ஆனால் அதற்கு பக்கத்தில் உள்ள சுண்டட்டி என்னும் சிற்றூரைக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அங்குள்ள ஆலமலை ரங்கநாதர் கோயில் மிகப் பிரசித்தம். வினை தீர்க்கும் தலம் என்பார்கள். இந்தக் கோயிலுக்குத்தான் ஜெயலலிதா இன்று வந்தார்.
தோழி சசிகலாவுடன் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த மாதம் 8&ம் தேதியில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார் ஜெயலலிதா. அங்கிருந்தே கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் ஏற்றும் அறிக்கைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார். இன்று பௌர்ணமி. அதோடு வைகாசி விசாகம். இந்த அருமையான நாளில் ஆலமலை ரங்கநாதலை தரிசிக்க தோழியோடு இன்று சுண்டட்டி வந்தார் ஜெயலலிதா. பகல் 12.40&க்கு கோயிலுக்குள் நுழைந்தனர். படுகர் இன மக்கள் பெரும்பான்மையான அளவில் உரிமை கொண்டாடும் கோயில் இது. ஜெயலலிதாவுக்கும் சசிக்கும் படுகர் பாரம்பரியத்தில் கோயில் மரியாதை அளிக்கப்பட்டது. ரங்கநாத சாமியை ஜெயலலிதா தரிசித்தார். மேடு, பள்ளமாக இருந்த இடங்களைக் கடந்து கோயிலுக்கு வந்ததால் களைப்பாக இருந்தார். இதனால் கோயில் வாசலில் இருந்த மேடையில் சிறிது நேரம் உட்கார்ந்து இளைப்பாறினார்.
அந்த சமயத்தில் கோயில் முன்பு, வழிபாட்டு முறையின் ஓர் அங்கமாக தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடிக் கொண்டிருந்தனர் படுகர் இனப் பெண்கள். அவர்களின் நடனத்தை ஆவலுடன் பார்த்த ஜெயலலிதா, யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர்களுடன் இணைந்து நடனமாடினார். ஒரு சில நிமிடம் மட்டுமே இந்த நடனம். பிறகு சிரித்தபடி விடைபெற்றுச் சென்றார்.

Sunday, May 18, 2008

விஜய் டெண்டுல்கர் மரணம்

பிரபல மராத்தி நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் இன்று மரணம் அடைந்தார். 80 வயதான டெண்டுல்கர் புனேயில் உள்ள வீட்டில் தன் இறுதிக் காலங்களை கழித்து வந்தார். உடல்நலக் குறைவோடு இருந்த அவர் இன்று காலை 8 மணிக்கு இறந்தார்.
வீரியம் கொண்டு நாடக ஆக்கங்களைக் கொடுத்தவர். நாட்டின் முதன்மையான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயர் பெற்றிருந்தார். சினிமாவிலும் தன் முத்திரையைக் காண்பித்தவர். Ôஅர்த் சத்யாÕ ஒரு எடுத்துக்காட்டு.
பத்மபூஷண், சங்கீத நாடக அகடமி மற்றும் தேசிய அளவில் சினிமா விருதுகளும் பெற்றவர்.
அவர் ஆத்மா சாந்தியடைவதாக

Saturday, May 17, 2008

லெஸ்பியன் - மே 17 - ஒரு பயங்கர ஒற்றுமை

MAY 17
MAY 17 is International Day Against Homophobia marking the day in 1990 that the WHO removed homosexulaity from its list of mental illnesses.



மே 17

சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர்கள் ஜெயந்திமலர் (35). ருக்மணி (33). சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள். இருவருக்கும் திருமணம் ஆன பின்பும் நெருக்கமாக இருந்தனர். இவர்கள் நெருக்கம் பற்றி தவறாகப் பேசப்பட்டது. அதைப் பற்றி இப் பெண்கள் கவலைகொள்ளவில்லை. இரு பெண்களின் கணவர்களுக்கும் இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. ஒரு வாரத்துக்கு முன் ருக்மணி, கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு ஜெயந்திமலர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் ருக்மணியை அழைத்துவர அவரது அக்கா வந்தார். ஆனால் ஜெயந்திமலரை விட்டு வரவே மாட்டேன் என்று ருக்மணி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஆனால் ருக்மணியின் அக்கா விடவில்லை. கணவன் வீட்டுக்குச் சென்று குடும்பம் நடத்தாமல் இப்படி கூத்தடிக்கிறாயே என்று சண்டை போட்டார். காலையில் வராவிட்டால் நடப்பதே வேறு என்று எச்சரித்துச் சென்றார். உறவினர்கள் நம்மைப் பிரித்து விடுவார்களோ என்று ஜெயந்திமலரும் ருக்மணியும் கலங்கினர். பிறகு வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி, இருவரும் தீக்குளித்தனர். கரிக்கட்டைகளாகத்தான் இன்று அவர்களை மீட்க முடிந்தது.

----மே 17 மாலைப் பத்திரிகை செய்தி

Thursday, May 15, 2008

கருணாநிதி ஆஸ்பத்திரியில் அட்மிட்

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலை முதல்வர் கருணாநிதி அட்மிட் செய்யப்பட்டார். காலையில் இருந்தே இதுதொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவிக் கொண்டிருந்த நிலையில், இதுகுறித்து நிதியமைச்சர் அன்பழகன் ஓர் அறிக்கை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அன்பழகனின் அறிக்கை:
கடந்த சில நாட்களாக கடுமையான கழுத்து வலி மற்-றும் முதுகு வலி-யி-னால் முதல்வர் கருணாநிதி பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். மருத்துவ-ம-னை-யில் சில நாட்-க-ளே-னும் தங்-கி-யி-ருந்து உரிய சிகிச்-சை-யைப் பெற வேண்-டும் என்று மருத்-துவ நிபு-ணர்-கள் வலி-யு-றுத்தி இருந்-த-னர். இதன் கார-ண-மாக போரூர் ராமச்-சந்-திரா மருத்-து-வ-ம-னை-யில் கரு-ணா-நிதி இன்று அனு-ம-திக்-கப்-பட்-டுள்-ளார். எனவே, சிகிச்சை நிறை-வ-டைந்து திரும்-பும் வரை அவரை யாரும் தொந்-த-ரவு செய்-திட வேண்-டாம் என்-றும் அவர் நலம் பெற முழு ஒத்-து-ழைப்பு நல்-கிட வேண்-டும் என்-றும் அனை-வ-ரை-யும் வற்-பு-றுத்-திக் கேட்-டுக் கொள்-கி-றேன். அன்-ப-ழ-கன் அறிக்கை இதுதான். ஆனால் இதன் பின்னணியில் அரசியல் காய் நகர்த்தல்களும் இருப்பதாக சொல்கிறார்கள். மருத்துவமனையில் சில நாட்களேனும் தங்கி சிகிச்சை பெறும் நிலையில் தனது பொறுப்புகளை அவர் ஸ்டாலினுக்கு கொடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

தானியக் குதிருக்குள்ளே முளைவிடும் பிரியம்இன்றிரவு

நான் நிறைய பதிவிட்டிருக்கிறேன். ஆச்சர்யம். துயரும் நெகிழ்வும் கூடிய இரவாக இருக்கிறது. என் ஆரம்பப் பதிவில் சொன்ன மனுஷ்யபுத்திரனின் நீராலானது என் மேசையின் இடப்புற ஓரம் இன்னும் வீற்றிருக்கிறது. அதனுள் உறைந்து உறங்கிக் கொண்டிருக்கும் பல கவிதைகளை பார்வை ஓட்டித் தீண்டி நீடித்திருக்க முடியவில்லை. நெகிழ்வு மொக்கை உருக்கி உடைத்து விடக் கூடிய வார்த்தைகள். இதை எனக்கு எப்போதோ கொடுத்துச் சென்ற தோழியின் கரங்களின் வெம்மையை இந்தக் கணத்திலே உணருகிறேன். கொதிக்கும் நீராலானது நூலில் இருந்து இதோ சில கவிதைகள். இனி நான் தூங்கப் போகிறேன்.
கடைசிச் சந்திப்பில்
-----இந்தக் கோப்பைகள் வழிய/நமக்குத் தேவை/இன்னும் ஒரு துளிக் கசப்பு/
எதேச்சையாக/அறையை ஒழுங்கமைப்பது போல/உன் பழைய பொருட்களைத்/திருப்பிக் கொடுக்கிறேன்/
வேறெதையோ/பேசிக்கொண்டு/கவனிக்காதது போல/அவற்றைப் பெற்றுக்கொள்கிறாய்/
அவை வந்து சேர்ந்த வழிமுறைகள்/மறந்துவிட்டன/
நீ அருந்த விரும்பாத பானம்/ஏற்கனவே பாதி விஷமாகிவிட்டது/
இதுதான் கடைசிச் சந்திப்பென்று/யாரும் சொல்லிக்கொள்வதில்லை/
போகும்போது/இனி விழிக்கக்கூடாதென நினைத்த முகங்களையும்/ஒரு முறை/திரும்பிப் பார்க்கத்தான் தோன்றுகிறது

-----------------தன் வழியே
தானியக் குதிருக்குள்ளே/ஒரு பிரியம்/மெல்ல முளை கட்டுகிறது/
அதற்கு/வெளிச்சமில்லை/காற்று இல்லை/பற்றிக்கொள்ள/ஒரு பிடி நிலமில்லை/தனது ஈரத்தை தவிர/அதற்கு ஒன்றுமேயில்லை/
ஆனால¢/பிடிவாதமாக/அது வெளியேறிக்கொண்டிருக்கிறது
இதுபோன்ற அருமையான சுட்டியைத் தருவதற்குக் கூட அனானியாகத்தான் வரவேண்டுமா, திரு. அனானியாரே

நட்சத்திரப் பதிவர் த. அகிலன் கவனத்துக்கு.....

உங்கள் பதிவு படித்தேன். எஸ். எழில்வேந்தன் நேர்காணல் மிக சுவாரசியம். என் பால்ய காலம் இலங்கை வானொலி கேட்டே கழிந்தது. கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது, ராமதாஸ் (என்று நினைக்கிறேன்) ஆகியோரின் காந்தக் குரலில் அப்போதெல்லாம் கட்டுண்டு கிடப்பேன்.
கே.எஸ். ராஜா அளிக்கும் திரை விருந்து மிகப் பிரபலம். Ôவீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டி அருகே அமர்ந்திருக்கும் திரைப்பட ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என் அன்பு கழுமிய வணக்கங்கள்Õ என மின்னல்வேகத்தில் அவர் அறிவித்துச் செல்லும் பாங்கு, நம் உடலுக்குள் ரசவாதத்தை ஏற்படுத்தக் கூடியது.
திரைப்படத்தின் முன்னோட்டமாக கொடுக்கும் நிகழ்ச்சிதான் திரை விருந்து. அதில் பல Ôகிம்மிக்ஸ்Õ வேலைகளையும் ராஜா நிகழ்த்திக் காட்டியிருப்பார். ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த படம் Ôநீயா?Õ. அதில் ஸ்ரீப்ரியா ஒரு பாம்பு. அந்த பாம்பின் புருஷனும் ஒரு பாம்பு. அதன் பெயர் ராஜா. இந்த இரண்டு பாம்புகளும் கூடிக் குலவிக் கொண்டிருக்கிற நேரத்திலே, காட்டுக்குள் வரும் கமல் தலைமையிலான வெட்டிப் பயல்கள் கூட்டம், ஸ்ரீப்ரியாவின் புருஷன் பாம்பை சுட்டுக் கொன்று விட்டுப் போய்விடும். அப்போது ஸ்ரீப்ரியா தனது அழகிய குரலால், Ôராஜா...என்னை விட்டுப் போய்ட்டீங்களா...Õ என்று அலறுவார். நீயா பட திரை விருந்து கொடுக்கும்போது, நிகழ்ச்சி முடியும் நேரத்தில் ஸ்ரீப்ரியா அலறலை வெளியிடுவார்கள். Ôராஜா....என்னை விட்டுப் போய்ட்டீங்களா...Õ. உடனே கே.எஸ். ராஜா தனது கம்பீரத் தொண்டையில் இப்படிச் சொல்வார்: Ô....இல்லவே இல்லை...மீண்டும் சனிக்கிழமை இதே நேரத்தில் திரை விருந்தில் உங்களைச் சந்திக்கிறேன். இப்போது உங்களிடம் இருந்து விடைபெறுவது கே.எஸ். ராஜ்ஜா...Õ
இப்படிப்பட்ட ஆளுமையான கே.எஸ். ராஜா, கடைசியில் தமிழகம் வந்து தண்ணியடித்தே செத்துப் போனது சோகம்.
உச்சரிப்பு நேர்த்தியின் உச்ச நட்சத்திரம் பி.ஹெச். அப்துல் ஹமீது. அவரின் அதிரும் குரலில்நேர்த்தியற்ற ஒலிபெருக்கிகள் கூட கம்பீரம் பெற்றுவிடும். உதயாவின் பாட்டு¢க்குப் பாட்டு, அவரது ஹைலைட் நிகழ்ச்சி. Ôசுபததாச உள்ளரங்கிலே....Õ என்று அவர் சொல்வது இன்னும் கூட என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏழு கேள்விகள் என்றொரு நிகழ்ச்சியும் பிரபலம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு தாபன அறிவிப்பாளர்கள் வழங்கும¢ என¢ விருப்பம் சுவையானது. ஒவ்வொரு அறிவிப்பாளரின் பாடல் ரசனையையும் அறிந்து கொள்ளலாம். அப்துல் ஹமீதுக்கு எப்போதும் சோகம் இழையோடும் மெலடிதான் பிடிக்கும். ஒருமுறை இப்படி அறிவித்தார். Ôபடத்தில் ஒரு குதிரை பாடுவது போல இந்த பாடல¢ வந்தாலும்...கண்டசாலாவின் குரலால் அழகுபெற்ற பாடல் இது...Õ என்று சொல்லி, Ôஎஜமான் பெற்ற செல்வமே...என் சின்ன எஜமானேÕ என்ற திராபை பாடலைப் போட்டார். நொந்து போனேன்.
தமிழகம் வந்து பல்வேறு நுண்ணரசியல்களால் பந்தாடப்பட்ட அவர், நிழல¢கள் ரவி அம்மன் முறுக்குக¢ கம்பிக்கு விளம்பரம் செய்கிற ரேஞ்சுக்கு, சி கிளாஸ் விளம்பர மாடலாக மாறிப் போய்விட்டார்.
இலங்கை வானொலியின் சாதனை ஒலிச்சித்திரம். முழுநீளத் திரைப்படத்தை அரை மணி அல்லது முக்கால் மணி நேரத்துக்குள் சுருக்கி, ஒலி வடிவில் அற்புதமாக கொடுத்து விடுவார்கள். எடிட்டிங் நேர்த்தி அவ்வளவு சிறப்பாக இருக்கும். வசனங்கள் நிறைந்த படங்கள் என்றால் வசதி. அருமையாகக் கொடுத்து விடலாம். பட்டிக்காடா பட்டணமா, விதி போன்ற படங்கள் இந்த ரகம். ஆனால், ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை வசனம¢ வரும் பாலுமகேந்திராவின் படத்துக்கே ஒலிச்சித்திரம் போட்டு அசத்தியவர்கள் இலங்கை வானொலிக்காரர்கள். பாலுமகேந்திராவின் படங்களில் காட்சிகளுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும். அப்படிப்பட்ட Ôஅழியாத கோலங்கள்Õ என்னும் படத்தைக்கூட ஒலிச்சித்திரமாக்கி அசத்தியது ரேடியோ சிலோன். எப்படி? ஷோபா, தன் பாட்டுக்கு ஆற்றங்கரை ஓரமாக நடந்துகொண்டே, தூரமாய் போகும் மாணவர்களைப் பார்த்து கையசைக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பின்னணி இசை மெலிதாய் ஒலிக்க, திரைச்சித்திரம் வழங்கும் அறிவிப்பாளர் மெல்லியதாய் அதிரும் குரலில் சொல்வார். நதியோரமாக ஆசிரியை போய்க்கொண்டிருக்கிறார்.. எதிர்வரும் மாணவர்களை...என்ற ரீதியில் போகும். அடேயப்பா என்ன உத்தி என்று சின்ன வயசில் வியந்திருக்கிறேன்.
என் அப்பா சொல்வார். இலங்கை வானொலியில் முன்பு மயில்வாகனம் சர்வானந்தா என்றொரு அறிவிப்பாளர் இருந்தாராம். அவர் அவ்வளவு பிரபலம். அந்தக் காலத்தில் தங்கவேலு நடித்த Ôநான் கண்ட சொர்க்கம்Õ படத்தில் சொர்க்கத்துக்குப் போகும் தங்கவேல் தன் கையில் வைத்திருக்கும் ரேடியோவைத் திருப்பும்போது, Ôஉங்கள் அன்பு அறிவிப்பாளர் மயில்வாகனம் சர்வானந்தா...Õ என்று சொல்லுமாம். உடனே தங்கவேலு, Ôஅடப்பாவிகளா..இவனுக சொர்க்கத்துக்கு வந்தாலும் விடமாட்டானுகளா...Õ என்பாராம்.
தற்போதைய பண்பலை அறிவிப்பாளர்களின் உச்சரிப்பை பற்றித் தரம் தாழ்த்தி சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அது தேவையற்றது என்பது என் எண்ணம். இது வேகத்தின் காலம். ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் மயக்கும் குரல் கேட்டு நான் காதல்வயப்பட்டிருக்கிறேன். சூரியன் எப்.எம்.மின் பழைய கண்மணியின் குரலுக்கும் இப்போதைய டோசிலாவின் குரலுக்கும் மாபெரும் ரசிகன் நான். தியாகராஜ பாகவதர் காலத்து ஆட்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் காலம் பிடிக்காது. எம்.எஸ்.வி காலத்தவருக்கு இளையராஜா பிடிக்காது. இளையராஜா கோஷ்டிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பிடிக்காது. என்னைப் பொருத்தவரை, Ôபொன் மகள் வந்தால்Õ டி.எம்.எஸ்.ஸ§ம் பிடிக்கிறது. அதன் ரீமிக்ஸ§ம் பிடிக்கிறது.சிறுபிராய நினைவுகளைக் கிளறியமைக்காக வெம்மை பொங்கும் இந்த நள்ளிரவிலே நன்றி சொல்லிக் கொள்கிறேன் அகிலன்.

உடலேதுமின்றி பெருகுகிறது ஒரு ஸ்பரிசம்

நான¢ வடசென்னைவாசி. ஆற்காடு வீராசாமியைப் பார்த்தால் உதைக்க வேண்டும் என்று எல¢லா வடசென்னைக்காரர்களும் நினைப்பார்கள். தினம் இரவானால் மின்தடை. பகலெல்லாம் கோடை வெப்பம். இரவெல்லாம் புழுக்கம் என்று மனதும் உடலும் வெந்து கிடக்கிறது. இதோ இதை எழுதுவதற்கு சிறிது முன்னர்தான் மின் தடை நீங்கி, வெளிச்சம் மினுங்கியது. விசிறி சுழன்றது. விசிறுவதற்காக நாளிதழுக்கு அடியில் இருந்த கவிதைத் தொகுப்பை எடுத்தேன். எனக்கு இலக்கியப் பரிச்சயம் சுத்தமாய் இல்லை. கவிதையை நேசிக்கும் தோழி கொடுத்தது (இப்போது கை மாறி விட்டது). மனுஷ்ய புத்திரன் என்பவரது நீராலானது என்ற கவித் தொகுப்பு. எதேச்சையாய் உள்ளே புரட்டியபோது மின்தடை பற்றிய கவிதை. அசந்துவிட்டேன். இருட்டைப் பற்றி என்னைப் போன்ற ஆட்கள் நினைப்பதற்கும் இந்த கவிஞர்கள் நினைப்பதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்.
அந்தக் கவிதை:
மின் தடை - : சில பதிவுகள
1
இவ்வளவு நேரமும்எங்கிருந்ததுஇவ்வளவு இருள்என்று கேட்கிறாள்குழந்தை
இருள்நம் சொற்களில் நிறைகிறதுநம் கோப்பைகளில் வழிகிறதுநம் கட்டிலில் படுத்துக்கொள்கிறதுநம் கிணற்றினை நிரப்புகிறதுநம் கண்ணீரில் கரிக்கிறதுநம் பிசாசுகளை எழுப்புகிறது
இருளைத் தொடும் குழந்தைஅஞ்சுகிறாள்
குழந்தைகளைப் பழக்க வேண்டும்இருளுக்கு
2
எத்தனையோ முறைஸ்பரிசித்த உடல்திசை தேடும்இருளில்தடுமாறித் தீண்டிய வேளைபெருகுகிறதுஉடலேதுமின்றிஒரு ஸ்பரிசம்
3
மெழுகுவர்த்திகள்தீக்குச்சிகள்டார்ச்சுகள்அவசர விளக்குகள்
சற்றே சுடர் தேடிநீளும் கைகளிடையேஒரு கை நீளக்கண்டேன்மலைகள் தாண்டிசூரியக் கதிரொன்று தேடி
4
இடத்தை அடைப்பதற்கென்றேகொண்டுவந்தோம்இந்தஉடலைமனதைதளவாடங்களை
நகரவொருஇடமற்ற வேளைஇருள் எடுத்துக்கொள்கிறதுஎல்லாவற்றையும்
எஞ்சுகிறோம்வீடுமற்ற வெளியுமற்றஓரிடத்தில்

தினகரன் பத்தி எவன்டா எழுதுனது...

வெறுப்பேற்றும் தினகரன் என்ற தலைப்பில் வந்த கட்டுரை
சேவியர் என்பவர் பதிவிலும் இருக்கு. தெய்வமகன் என்பவர்
பதிவிலும் இருக்கு. அது யார் எழுதிய கட்டுரை. வலைப்பதிவு உலகுக்கு புதியவனான
எனக்கு, ஞானிகள் யாராவது இருந்தால் இதுபற்றி விளக்கவும்

Monday, May 5, 2008

ஷோபாடேவின் புதிய புத்தகம் டர்...டர்..

பிரபல எழுத்தாளரான அறுபது வயது அழகி ஷோபாடே சமீபத்தில் எழுதிய புதிய புத்தகம் Ôசூப்பர்ஸ்டார் இண்டியா: ஃபிரம் இன்கிரடிபிள் டு அன்ஸ்டாப்பபிள்Õ. மும்பையில் சூப்பர் ஸ்டார் அமிதாப் வெளியிட்டார். இப் புத்தகத்துக்கான விமர்சனத்தை, சிறந்த பத்தி எழுத்தரான பாய்சந்த் படேல், சமீபத்திய Ôஅவுட்லுக்Õ இதழில் (மே 6 & 12) எழுதியிருக்கிறார். எழுதியிருக்கிறார் என்பதை விட கிழித்திருக்கிறார் என்று சொல்வது சரியாக இருக்கும்.Ôஇந்தியாவைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகத்தின் அட்டையில் எதற்காக ஆசிரியரின் புகைப்படத்தை போட வேண்டும். ஆசிரியர் ஷோபாடே என்னவோ அழகுதான். ஆனால் புத்தகத்தின் சாரத்தை அப்படிச் சொல்ல முடியவில்லை. படு சாதாரணம்Õ என்று துவக்கத்திலே பளீரடி கொடுத்திருக்கும் பாய்சந்த் படேல், ஷோபா டே ஏன் பெங்குவின் பதிப்பகத்தின் செல்லக் குழந்தையாக இருக்கிறார் என்பதை கொஞ்சம் வயிற்றெரிச்சலோடு சொல்கிறார். பெங்குவின் பதிப்பகத்தின் தங்க வாத்து ஷோபா டே என்பதற்கு ஒரு கதை வேறு சொல்கிறார். பெங்குவின் இந்தியா பதிப்பாளராக டேவிட் டேவிதார் இருந்த சமயம், ஷோபா டே&வின் புதிய நாவலுக்கான கையெழுத்துப் பிரதியைப் பார்த்து பதிப்பக ஊழியர் ஒருவர் சிரிசிரியென்று சிரித்துக்கொண்டிருந்தாராம். டேவிதார் அவரைக் கடுமையாகப் பார்த்து, ÔÔசிரிக்காதே. இந்த புத்தகம்தான் உன் சம்பளத்தைத் தந்து கொண்டிருக்கிறதுÕÕ என்றாராம். ஷோ&வுக்கு பெங்குவினில் உள்ள Ôகனத்தைÕ தெரிந்துகொள்ளுங்கள். இதன்பிறகும் பாய்சந்த் விமர்சனத்துக்கு வந்துவிடவில்லை. பெங்கு&ஷோபா நெருக்கத்தை பொறுமலோடு சொல்லித் தீர்க்கிறார். பெங்குவின் பதிப்பகம் தனது 20&ம் ஆண்டுக் கொண்டாட்டத்தை இந்தியாவில் நடத்தியபோது. ஷோபா டேவை மும்பையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து வந்தார்கள். தாஜ் ஓட்டலில் தங்க வைத்தார்கள். நான் கூட (வேறுயார் பாய்சந்த் படேல்தான்) பெங்குவினுக்கு புத்தகம் எழுதிக் கொடுத்திருக்கிறேன். எனக்கெல்லாம் இப்படி சிறப்புச் செய்யவில்லையே என்று அங்கலாய்க்கிறார்.சில பக்கங்களில் குறிப்பிட்ட சில வாக்கியங்களை கொட்டை எழுத்தில் போட்டுள்ளார்கள். எதற்கென்று தெரியவில்லை. ஆசிரியர் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். ஒருக்கால் அந்த கொட்டை எழுத்துகளை மட்டும் படித்தால் போதும். 400&க்கும் மேற்பட்ட பக்கங்களைப் படித்து களைக்க வேண்டாம் என்ற சலுகையில் போட்டிருப்பார்கள் போலிருக்கிறது என்றும் படேல் கிண்டலடிக்கிறார்.நூலில் உள்ள இலக்கியத் தரமான ஒரு பகுதியை வெளியிடுகிறேன். வாசகர்களே நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றும் பகடி செய்கிறார்.எனக்கென்னவோ, இது உண்மையான விமர்சனமாகத் தெரியவில்லை. பழைய காண்டு தெரிகிறது. ஆனால், வினோத் மேத்தா போன்ற ஓர் ஆளுமையின் ஆசிரியத்துவத்தில் வரும் ஒரு பத்திரிகையில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. புத்தகம் கிடைத்துப் படித்தவர்கள் சொல்லுங்கள்.

Wednesday, April 16, 2008

பீர் சாமியாரும் அவரது காதல் மனைவி டாக்டர் திவ்யாவும் திடீர் தற்கொலை

சென்னை சிட்லபாக்கத்தில் ஆசிரம் அமைத்து 3 பொண்டாட்டியைக் கட்டி செய்தித் தாளில் பரபரப்பாக அடிபட்ட பீர் சாமியாரை நினைவிருக்கிறதா? அவரும் அவரது இளம் காதல் மனைவி டாக்டர் திவ்யாவும், சாமியாரின் முதல் மனைவி வீட்டில் இன்று தற்கொலை செய்துகொண்டனர். பரபரப்புப் பத்திரிகைகள்தான் இந்த சாவுக்குக் காரணமோ?

Tuesday, April 15, 2008

லக்கிலுக் பார்த்த பார்வை படமே நின்னு போச்சு...

ராமர் ஒண்ணுக்கு அடிக்கிற படத்தை லக்கிலுக் தன் பதிவில் போட்டார். Ôவணக்கம்மாÕ என்ற படத்தின் இன்விடேஷனில் இருந்த படம் அது. அன்புத்தென்னரசன் தயாரிக்கிற படம். ஒண்ணுக்கு படத்தை மெட்ராஸ் எல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று படப்பிடிப்பு நடப்பதாக இருந்தது. இந்து முன்னணி கோஷ்டி போய் ஒரே ஆர்ப்பாட்டம். போலீஸ் குவிஞ்சு ரகளை. கடைசியில படப்பிடிப்பை நிறுத்தியாச்சு. ஷ§ட்டிங் இனிமே நடக்குமான்றதே சந்தேகமாம். ராமர் ஒண்ணுக்கு அடிச்ச போஸ்டர போட்ட சந்துரு என்பவரையும் போலீஸ் பிடிச்சிருக்காம். லக்கி சந்தோஷமா?

Tuesday, April 8, 2008

ஸ்ரேயாவை கட்டி அணைக்க முயன்றசங்கர மடத்தின் ஊழியருக்கு அறை

திருப்-பதி ஏழு-ம-லை-யான் கோயி-லில் சாமி கும்-பிட வந்த நடிகை ஸ்ரே-யாவை சங்-க-ர-மட துப்-பு-ரவு தொழி-லாளி கட்-டிப் பிடிக்க முயன்-றார். ஆத்-தி-ரம் அடைந்த ஸ்ரேயா, அவரை அறைந்-த-தால் பர-ப-ரப்பு ஏற்-பட்-டது.பிர-பல நடிகை ஸ்ரேயா, உகாதி தினத்தை முன்-னிட்டு திருப்-பதி கோயி-லில் சாமி தரி-ச-னம் செய்ய விரும்-பி-னார். இதற்கு திருப்-பதி எம்-எல்ஏ வெங்-கட்-ர-மணா ஏற்-பாடு செய்-தார். நேற்று அதி-காலை 2.30 மணிக்கு ஏழு-ம-லை-யான் கோயி-லுக்கு வந்த ஸ்ரேயா, சுப்-ர-பாத சேவா தரி-ச-னம் செய்-தார். பின்-னர் 3.45 மணிக்கு கோயி-லில் இருந்து வெளியே வந்-தார். அப்-போது ஒரு-வர், ஸ்ரே-யாவை நெருக்-க-மாக பின்-தொ-டர்ந்து வந்-தார்.அவர் ஸ்ரே-யா-வு-டன் கைகு-லுக்-க-வும், அவரை தொட்-டுப் பார்க்-க-வும் முயற்சி செய்-தார். அது முடி-யா-த-தால் ஸ்ரே-யாவை சுற்-றி-வ-ளைத்து திடீ-ரென கட்-டி-ய-ணைக்க முயன்-றார். இதில் ஆத்-தி-ரம் அடைந்த ஸ்ரேயா, அந்த ஆசா-மியை ஓங்கி அறைந்-தார். அதிர்ச்சி அடைந்த ஆசாமி, உட-ன-டி-யாக அங்-கி-ருந்து தப்-பி-யோடி விட்-டார். பின்-னர் ஸ்ரேயா அங்-கி-ருந்து புறப்-பட்டு சென்-றார்.அறை வாங்-கிய நபர், திருப்-பதி சங்-க-ர-ம-டத்-தில் துப்-பு-ரவு தொழி-லா-ளி-யாக வேலை பார்க்-கும் ஹரி என விசா-ர-ணை-யில் தெரி-ய-வந்-தது. ஆனால், அவர் மீது ஸ்ரேயா எந்த புகா-ரும் கொடுக்-க-வில்லை. இந்த சம்-ப-வத்-தால் திரு-ம-லை-யில் பர-ப-ரப்பு ஏற்-பட்-டது

Wednesday, April 2, 2008

சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் நடிகர்கள் உண்ணாவிரதம் ரஜினி பங்கேற்பாரா?

கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து நாளை மறுநாள் சேப்பாக்கத்தில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். இதில் ரஜினி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.பெங்களூரில் தியேட்டர், தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் நாளை மறுநாள் (4&ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை அறிவித்துள்ளன. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர¢ சங்க பொதுச் செயலாளர் ராதாரவி தலைமையில் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அவர்களுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.உண்ணாவிரத போராட்டத்துக்காக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 100 பேர் அமரும் வகையில் மேடை அமைக்கப்படுகிறது. இதில் முன்னணி நடிகர் நடிகைகள், பல்வேறு திரைப்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் அமர்ந்திருப்பார்கள். மேடைக்கு எதிரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏற்கனவே காவிரி பிரச்னைக்காக நடந்த ª நடிகர், நடிகைகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை விட ரஜினி கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்பதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.நய்வேலி போராட்டத்தில் ரஜினி கலந்து கொள்ளாமல் தனியாக உண்ணாவிரதம் இருந்தார். அதுபோல இப்போதும் அவர் தனியாக ஏதாவது போராட்டம் நடத்துவார் என்று ஒரு தரப்பினரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்பார் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகிறார்கள்.கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் நடத்து வந்த Ôகுசேலன்Õ படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டு நடித்தார். படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்து ரஜினி மற்றும் படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பி விட்டனர். மீண்டும் வரும் 9&ம் தேதிதான் படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது சென்னையில் இருக்கும் ரஜினி, தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. உண்ணாவிரதத்தில் நேரடியாக பங்கேற்காமல் போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு சால்வை அணிவித்து, ஆதரவு தெரிவித்து வந்துவிடுவார் என்றும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Thursday, March 27, 2008

பிரான்ஸ் அதிபர் சர்கோஸியின் காதல் மனைவியின் நிர்வாணப் படம்




இவர் வேறு யாருமல்ல. பிரெஞ்சு தேசத்தின் முதல் குடிமகள். அதாவது பிரான்ஸ் அதிபர் சர்கோஸியின் காதல் மனைவியான கார்லா புரூனி. அந்தக் காலத்தில் மாடல் செய்தபோது இதுபோல் சர்வசாதாரண போஸ் எல்லாம் கொடுத்திருக்கிறார். அமெரிக்க, பிரான்ஸ் பத்திரிகைகளுக்கு கார்லா முன்பு மாடலிங்கில் கலக்கிய கிக் படங்களை எடுத்துப் போடுவதுதான் வேலை. லேட்டஸ்டாக வெளிவந்த நிர்வாணப் படம்தான் இது. நியூயார்க்கில் ஏலம் விடப் போகிறார்கள். டாலர்களைக் கொட்டி இதை வாங்க ஒரு கூட்டமே காத்திருக்கிறது. அசோசியேட் பிரஸ் வெளியிட்ட படம் இது. உலகம் முழுதும் அனைத்துப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. தமிழ் வலையுலக தோழர்களின் பார்வைக்காக இதை வைக்கிறேன். இதன்பொருட்டு ஆபாசப் பதிவிட்டவன் என்று சொல்லி என்னை தமிழ்மணத்தில் இருந்து விலக்கிவிடும் அபாயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அச்சமாக இருக்கிறது. தோழர்கள் ஓசை, தமிழச்சி, லக்கி முதலானோர் கருத்துச் சொன்னால் நலம்.

Tuesday, March 11, 2008

ஐயா ராமதாசுக்கு மொழிபெயர்ப்பு

வாசகர்களின் நலன் கருதி, அய்யா ராமதாஸின் தமிழ் ஓசை செய்திகளின் மொழிபெயர்ப்பு இங்கு அவ்வப்போது வழங்கப்படும்.
இன்றைய நாளிதழ் மொழிபெயர்ப்பு:
செய்தி: 10 நாட்களாகியும் அகற்றாத திமுகவினரின் வெட்டுருக்கள்
மொ.பெ: 10 நாட்களாகியும் அகற்றாத திமுகவினரின் கட்அவுட்கள்
செய்தி: பாசகவை எதிர்கொள்ள கிருட்டினா திட்டம்
மொ.பெ: பாஜகவை எதிர்கொள்ள கிருஷ்ணா திட்டம்
செய்தி: ஊர்திப் பேணல் துறையில் 7 பேர் பணியமர்த்தம்
மொ.பெ: வாகனப் பராமரிப்புத் துறையில் 7 பேர் நியமனம்
செய்தி: மூடுந்து மீது சரக்குந்து மோதி 7 பேர் சாவு
மொ.பெ: வேன் மீது லாரி மோதி 7 பேர் சாவு
இதுபோல் செய்தியின் பொருள் குறித்து அறிய பதிவர்கள் விரும்பினால் எனக்கு மின்னஞ்சல் செய்யலாம்

Sunday, March 9, 2008

பாடகர் மிஷ்கின்

அஞ்சாதே படத்தின் பாடல்களைக் கேட்கிற சமயத்தில்தான் கவனித்தேன். டைரக்டர் மிஷ்கின் 2 பாடல்களைப் பாடியிருக்கிறார். கண்ணதாசன் காரைக்குடி மற்றும் தலைப்புப் பாடலான அச்சம் தவிர். ஒரு படத்தின் தீர்மான சக்தியாக இருப்பவர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். எப்பா இசையமைப்பு நமக்கு ரெண்டு பாட்டப் போடு. நானும் பாட்றேன் என்று சொல்லிவிட்டால் வேறு வழியில்லை. கர்ணகடூரமாக எதையாவது பாடிவைத்தால் அதை கேட்டுத்தான் தொலைக்க வேண்டியிருக்கும். அந்த ரகமாகத்தான் இருக்கும் என நினைத்து கேட்க ஆரம்பித்து அசந்து விட்டேன். பிசிறில்லாத, ஸ்ருதி சுத்தமான மயக்கும் குரல். ஹாட்ஸ் ஆப் மிஷ்கின்.பாரதியாரின் அச்சம் தவிர் பாட்டைக் கேட்கும்போது ஏழாவது மனிதனில் அச்சமில்லை அச்சமில்லை என்ற எஸ்பிபியின் உணர்ச்சியூட்டும் பாடல் நினைவுக்கு வந்தது. அந்த பாடலை ரேடியோவில் கேட்கவே முடியாது. அதுபோல ஒரு புரட்சிகரத்தன்மையுடன் இருந்த மற்றொரு பாடல் ஊமை விழிகளில் வரும் தோல்வி நிலையென நினைத்தால்...இந்தப் பாடலுக்கு ஆல் இந்தியா ரேடியோ தடையே போட்டிருந்ததாகக் கேள்வி. எதற்கென்று இதுவரை தெரியவில்லை.

காஷ்மீர் சிங் உளவாளியா, கடத்தல்காரனா....

35 வருஷம் பாகிஸ்தான் சிறைகளில் இரும்புக் குண்டுகளைப் பிணைத்துக் கிடந்தபோதுகூட காஷ்மீர் சிங் இந்த அளவு வருந்தியிருக்க மாட்டார் என்று தெரிகிறது. முஷாரப்பின் கருணையால் விடுதலையாகி இப்போது இந்தியா வந்திருக்கிறார். சொந்த ஊரான பஞ்சாப் போய் சும்மா இருக்க வேண்டியதுதானே. பேட்டி கொடுத்தார். இந்தியாவுக்காக உளவு பாத்தேன். மரண தண்டனை விதிக்கப்பட்டு, 35 வருஷம் ஜெயில்ல கஷ்டப்பட்டு அங்க இருக்கிற மனித உரிமை மந்திரி முயற்சியால எப்படியோ தண்டனையில இருந்து தப்பிச்சு வந்துட்டேன். ஆனா, இந்தியா எனக்காக என்ன பண்ணுச்சு. என்ன விடுதலை பண்றதுக்கு மாத்தி, மாத்தி வந்த எந்த மத்திய அரசும் முயற்சியே எடுக்கல. என் வீட்டைக்கூட கவனிக்கல. என் பொண்டாட்டி பத்து, பாத்திரம் தேச்சு பொழைக்க வேண்டி வந்தது என்று உருக்கமாக பேட்டி அளித்தார். பத்திரிகைகள் இதை பெருஸ§ பெருஸா போட்டது. பாகிஸ்தான் பத்திரிகையும்தான்.இதில்தான் வினை ஆரம்பித்தது. காஷ்மீர் சிங் விடுதலையாக ரொம்ப பாடுபட்டவர் அங்கு இருக்கும் மனித உரிமைகள¢ அமைச்சர் அன்சார் பா¢னே. காஷ்மீர் சிங்கின் பேட்டியைப் பாத்து அவர் கொதித்துப் போய்விட்டார். ÔÔஅப்பாவின்னு சொன்னதாலதானே அந்த ஆள் விடுதலைக்கு பாடுபட்டேன். இப்போ உளவாளின்னு அந்த ஆளே சொல்றாரே. அடப்பாவிÕÕ என்று காட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார் அன்சார். இது தெரிந்ததும் காஷ்மீர் சிங் பயந்துவிட்டார். எங்கே திரும்பவும் ராவல்பிண்டிக்கு கூட்டிட்டுப் போய் ஜெயில்ல தள்ளிருவானோன்னு நினைச்சுட்டார். ஐயாங்களா நான் உளவாளி இல்லை. கடத்தல் பண்ணத்தான் போனேன். இந்த பத்திரிகைக்காரப் பயலுவ ஏதேதோ எளுதிப்புட்டானுக. என்ன வுட்ருங்கோ என்று இப்போ கதறுகிறார். சிறையில் முஸ்லீமாக மதம் மாறினேன் என்றும் இல்லை, இல்லை மதம் மாறவில்லை. உளவு பார்க்கிறதுக்காக நடிச்சேன் என்றும் மாறி, மாறி கூறுகிறார்.தேசத்துக்காக பாடுபட்டால் இப்படித்தான் ஆகுமா. தேசியம் என்பது பெருங்கதையாடல், தேசப்பற்று என்பது பேப்பெருங்கதையாடல் என்று பொளந்துகட்டிக் கொண்டிருக்கும் போஸ்ட்மாடர்னீய பதிவர்கள் இதுபற்ற¤ ஏதாவது சொல்லுங்களேன்.

காங். வேட்பாளர்கள் & பரிசுப் போட்டி

ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு இரண்டு இடம். யார், யார் வேட்பாளர்கள். தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிக¢ கடலுக்குள் அத்தனை சுபலமாகச் சொல்லிவிட முடியுமா என்ன? வாசன் உறுதி என்கிறார்கள். இன்னொருவர் ஜெயந்தி நடராஜனாக இருக்கலாமாம். வேட்புமனுத் தாக்கலின் முடிவு நாளான 15&ம் தேதி காலைதான் டில்லி மேலிடம் சொல்லும்.கணிப்பதில் புலியான பதிவர்கள் 15&ம் தேதிக்கு முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்று சொல்லலாம். இரண்டு பெயரையும் சரியாகச் சொல்லும் ஒருவருக்கு ஆதிமூலத்தின் Ôபிட்வீன் த லைன்ஸ்Õ புத்தகத்தை பரிசாக அளிக்கிறேன். ஒரு பெயர் மட்டும் சரியாக சொல்பவர்களுக்கு, யாஹ§ மெசஞ்சர் சாட்டில் அண்மையில் மடக்கிய என் பெங்களுர் பிகரை தாரை வார்க்கிறேன்.ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சரியான விடையை சொல்லியிருந்தால்?.... புத்தகத்தை கொடுக்கலமா. பிகரை பங்கிட முடியாதல்லவா. எனவே குலுக்கல்தான்

Saturday, March 8, 2008

வக்கீல் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி...திமுக வேட்பாளர்கள்

2.30&க்கு சொல்றேன்னேன். 11.30&க்கே திமுக தலைமை சொல்லிருச்சி. ஹி...ஹி..அந்த 2 எம்பிக்கள் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி.
வக்கீல் ஜின்னாக்கு 67 வயசு. கருணாநிதி ஊர்க்காரரு. 30 வருஷமா ஐகோர்ட் வக்கீல். திமுக தலைமைக் கழக வக்கீல்.
வசந்தி ஸ்டான்லி தலைமைக் கழக பேச்சாளர். வயசு 45. தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர். ஸ்ரீவில்லிபுத்தூர் சொந்த ஊர்.
தமிழச்சி தங்கப்பாண்டியனுக்காக அஞ்சாநெஞ்சர் ரொம்ப டிரை பண்ணார். முடியலை. அப்படீன்னாக்கா தளபதிக்கு வெற்றியா...

திமுகவின் அந்த 2 எம்பி யார்?

ராஜ்யசபா தேர்தலில் திமுக 2 இடத்தில் ஜெயிப்பது உறுதி. யார் அந்த வேட்பாளர்கள்.இந்திய நேரப்படி இன்று பகல் 2.30க்கு மேல் அறிவிக்கிறேன்.ஆரூடம் பலிக்கும்.

ஜெயலலிதாவின் கவிதை

..........................................
..........................................
...........................................
விசையடிந்த உள்ளத்தில் வலிமை வேண்டும்
புதுமைப் பெண்மை புத்துலகம் படைக்கின்ற திருநாள் வரவேண்டும்
புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்துவைக்கும்
திருநாளாய் மகளிர் தினம் மலரட்டும்
தையலை உயர்வு செய் எனும் பாரதியின் கவிதைக் கட்டளை
மானுடத்தின் பொதுச் சட்டமாகட்டும்.
உலகப் பெண்மைக்கு என் உளமார்ந்த வாழ்த்து
தழிழகப் பெண்மைக்கு என் தனிப்பட்ட வாழ்த்து
(மகளிர் தினத்தை ஒட்டி ஜெயலலிதாவின் கவிதை அறிக்கை)
தாயி...பின்ற

15-ம் தேதிக்கு பிறகு பா.ம.க. என்ன செய்யும்?

ஒன்றும் செய்யாது. திமுக கூட்டணியில்தான் இருக்கும். அதற்குள் கொஞ்சம் உதார் விட்டுப் பார்க்கலாம். கிடைத்தால் லாபம் என்பது மட்டுமே பாமகவின் கணக்கு.
திமுக கூட்டணிக்கு பாமக கொடுத்துவரும் லேட்டஸ்ட் தலைவலி ராஜ்யசபா தேர்தல். தமிழ்நாட்டில் இருந்து 6 எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (தேவைப்பட்டால்) 26ம் தேதி நடக்கிறது. வேட்புமனு கடைசி நாள் வரும் 15. ராமதாஸ் தனக்குத்தானே வைத்திருக்கிற கெடு நாள்.
ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. திமுக கூட்டணி சார்பில் 4 எம்பிக்களையும் அதிமுக கூட்டணி சார்பில் ஒரு எம்பியையும் ஈஸியாக தேர்ந்தெடுத்து விடலாம். ஒரு எம்.பி. பதவிக்குத்தான் போட்டி இருக்கிறது. அது மார்க்சிஸ்டுக்குத்தான் என்று கருணாநிதி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஊஹ§ம் எங்களுக்குத்தான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது பாமக. Ôதிமுகவுக்கு இரண்டு இடம் எதுக்கு? எங்களுக்கு ஒண்ணு கொடுங்கÕ என்கிறார்கள்.
Ôஅன்புமணிதான் இருக்கிறாரே. அவரோட பதவிக்காலம் முடிய இன்னும் வருஷங்கள் கிடக்கே. அப்புறம் எதுக்கு இன்னொரு எம்பிக்கும் அலைகிறீர்கள்Õ என்கிறது திமுக.
பாமகவுக்கு சீட் கிடைக்கவே கிடைக்காது என்று இன்னொரு முறையும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் கருணாநிதி. ராஜ்யசபா தேர்தலைப் பொறுத்தவரை 2004ல் பாமகவுக்கு கொடுத்தாயிற்று. 2006ல் இந்திய கம்யூனிஸ்டுக்கு கொடுத்தாயிற்று. இப்போது காங்கிரசுக்கு 2 இடமும் மார்க்சிஸ்டுக்கு ஒரு இடமும் கொடுப்பதுதான் நியாயம். பாமக இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த வரிசைக்கிரமத்தில் அடுத்தது பாமகவுக்குத்தான் கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். அடுத்த வாய்ப்பு என்பது 2010ல். நாங்கள் என்ன கேனயர்களா என்கிறது பாமக தரப்பு. கருணாநிதி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லிவிட்டாரே என்றால். 15ம் தேதி வரை டயம் இருக்குல்ல. நடக்கிறத பாருங்க என்கிறார் ராமதாஸ் பிரயோஜனமில்லை. கதவு மூடியாகிவிட்டது. சம்பந்தி கிருஷ்ணசாமியை காங்கிரஸ் நிறுத்திவிட்டால் ராமதாஸ் வாய்திறக்க மாட்டார் என்று ஒரு திட்டம் இருக்கிறது. டில்லியில் சோனியா தூதர் அன்புமணியிடம் பிரஷர் கொடுக்கிறார்.
எனவே-
15ம் தேதிக்கு பிறகு ஒன்றும் நடக்காது. அன்புமணியின் நலன் கருதி அதிமுகவுக்கும் போகமாட்டார்கள். ஏதாவது போராட்டத்தைப் பண்ணிக்கொண்டே திமுக கூட்டணியில் இருக்கும் பாமக. இதுதான் நடக்கப்போகிறது. இது நடக்காவிட்டால் நான் வலைப்பதிவில் இருந்து விலகிக் கொள்கிறேன். சேலஞ்ச்.

15-ம் தேதிக்கு பிறகு பா.ம.க. என்ன செய்யும்?

ஒன்றும் செய்யாது. திமுக கூட்டணியில்தான் இருக்கும். அதற்குள் கொஞ்சம் உதார் விட்டுப் பார்க்கலாம். கிடைத்தால் லாபம் என்பது மட்டுமே பாமகவின் கணக்கு.
திமுக கூட்டணிக்கு பாமக கொடுத்துவரும் லேட்டஸ்ட் தலைவலி ராஜ்யசபா தேர்தல். தமிழ்நாட்டில் இருந்து 6 எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (தேவைப்பட்டால்) 26ம் தேதி நடக்கிறது. வேட்புமனு கடைசி நாள் வரும் 15. ராமதாஸ் தனக்குத்தானே வைத்திருக்கிற கெடு நாள்.
ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. திமுக கூட்டணி சார்பில் 4 எம்பிக்களையும் அதிமுக கூட்டணி சார்பில் ஒரு எம்பியையும் ஈஸியாக தேர்ந்தெடுத்து விடலாம். ஒரு எம்.பி. பதவிக்குத்தான் போட்டி இருக்கிறது. அது மார்க்சிஸ்டுக்குத்தான் என்று கருணாநிதி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஊஹ§ம் எங்களுக்குத்தான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது பாமக. Ôதிமுகவுக்கு இரண்டு இடம் எதுக்கு? எங்களுக்கு ஒண்ணு கொடுங்கÕ என்கிறார்கள்.
Ôஅன்புமணிதான் இருக்கிறாரே. அவரோட பதவிக்காலம் முடிய இன்னும் வருஷங்கள் கிடக்கே. அப்புறம் எதுக்கு இன்னொரு எம்பிக்கும் அலைகிறீர்கள்Õ என்கிறது திமுக.
பாமகவுக்கு சீட் கிடைக்கவே கிடைக்காது என்று இன்னொரு முறையும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் கருணாநிதி. ராஜ்யசபா தேர்தலைப் பொறுத்தவரை 2004ல் பாமகவுக்கு கொடுத்தாயிற்று. 2006ல் இந்திய கம்யூனிஸ்டுக்கு கொடுத்தாயிற்று. இப்போது காங்கிரசுக்கு 2 இடமும் மார்க்சிஸ்டுக்கு ஒரு இடமும் கொடுப்பதுதான் நியாயம். பாமக இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த வரிசைக்கிரமத்தில் அடுத்தது பாமகவுக்குத்தான் கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். அடுத்த வாய்ப்பு என்பது 2010ல். நாங்கள் என்ன கேனயர்களா என்கிறது பாமக தரப்பு. கருணாநிதி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லிவிட்டாரே என்றால். 15ம் தேதி வரை டயம் இருக்குல்ல. நடக்கிறத பாருங்க என்கிறார் ராமதாஸ் பிரயோஜனமில்லை. கதவு மூடியாகிவிட்டது. சம்பந்தி கிருஷ்ணசாமியை காங்கிரஸ் நிறுத்திவிட்டால் ராமதாஸ் வாய்திறக்க மாட்டார் என்று ஒரு திட்டம் இருக்கிறது. டில்லியில் சோனியா தூதர் அன்புமணியிடம் பிரஷர் கொடுக்கிறார்.
எனவே-
15ம் தேதிக்கு பிறகு ஒன்றும் நடக்காது. அன்புமணியின் நலன் கருதி அதிமுகவுக்கும் போகமாட்டார்கள். ஏதாவது போராட்டத்தைப் பண்ணிக்கொண்டே திமுக கூட்டணியில் இருக்கும் பாமக. இதுதான் நடக்கப்போகிறது. இது நடக்காவிட்டால் நான் வலைப்பதிவில் இருந்து விலகிக் கொள்கிறேன். சேலஞ்ச்.

Friday, March 7, 2008

மூன்றாம் பதிவு

தமிழ்மணத்தில் இணைப்பதற்கான மூன்றாம் பதிவு. :)

இந்த வலைப்பதிவில்...

என்னைச் சுற்றிலும் அரங்கேறும் அரசியல்,ஊடக,சினிமா,கலை இலக்கிய அட்டகாசங்களை பயந்த(துணிவில்லாமல்) மனத்துடன் வெட்ட வெளிச்சமாக்கும் பதிவுகள் வலம்வரும்.

முதல் பதிவு.

இது முதல் பதிவு. ஆனால் சத்தியமாக சோதனைப்பதிவல்ல.