Saturday, May 17, 2008

லெஸ்பியன் - மே 17 - ஒரு பயங்கர ஒற்றுமை

MAY 17
MAY 17 is International Day Against Homophobia marking the day in 1990 that the WHO removed homosexulaity from its list of mental illnesses.



மே 17

சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர்கள் ஜெயந்திமலர் (35). ருக்மணி (33). சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள். இருவருக்கும் திருமணம் ஆன பின்பும் நெருக்கமாக இருந்தனர். இவர்கள் நெருக்கம் பற்றி தவறாகப் பேசப்பட்டது. அதைப் பற்றி இப் பெண்கள் கவலைகொள்ளவில்லை. இரு பெண்களின் கணவர்களுக்கும் இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. ஒரு வாரத்துக்கு முன் ருக்மணி, கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு ஜெயந்திமலர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் ருக்மணியை அழைத்துவர அவரது அக்கா வந்தார். ஆனால் ஜெயந்திமலரை விட்டு வரவே மாட்டேன் என்று ருக்மணி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஆனால் ருக்மணியின் அக்கா விடவில்லை. கணவன் வீட்டுக்குச் சென்று குடும்பம் நடத்தாமல் இப்படி கூத்தடிக்கிறாயே என்று சண்டை போட்டார். காலையில் வராவிட்டால் நடப்பதே வேறு என்று எச்சரித்துச் சென்றார். உறவினர்கள் நம்மைப் பிரித்து விடுவார்களோ என்று ஜெயந்திமலரும் ருக்மணியும் கலங்கினர். பிறகு வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி, இருவரும் தீக்குளித்தனர். கரிக்கட்டைகளாகத்தான் இன்று அவர்களை மீட்க முடிந்தது.

----மே 17 மாலைப் பத்திரிகை செய்தி

1 comment:

தமிழ்நதி said...

யார் யாரைத் தேர்வது என்பதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது புரியத்தானில்லை.