Thursday, June 12, 2008

தசாவதாரம் பாத்துட்டேளா....

இன்றைய தேதியில் மிக முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருவது, தசாவதாரம் படத்தின் கதை என்ன என்பதுதான். நேற்றே பிரிவியூ பார்த்துவிட்டு கிறங்கிப் போய் வந்த நண்பர்கள் சிலரிடம் நேர் பேச்சிலும் தொலைபேசி வாயிலுமாகக் கேட்டேன். கதைச் சுருக்கம் சொல்லுங்கள் என்று. யோசித்துச் சொல்கிறோம். 16 மணி நேரம் டைம் கொடு என்கின்றனர். 17&ம் நூற்றாண்டு, ஜார்ஜ் புஷ் என்று ஒரு இளம் நண்பி ஏதேதோ புலம்பிக் கொண்டுள்ளார். என் பிரார்த்தனை எல்லாம் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாணு போல் ஆகிவிடக் கூடாது என்பதுதான். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஒரு வாரம் லீவ். கேரளக் கடற்கரை நகரங்கள், வயநாடு வழியாக மைசூர், குடகு வரை சென்று வர ஒரு டூர் ஏற்பாடு. வருவதற்குள் யாராவது கதை கண்டுபிடித்து பதிவு போட்டு வையுங்கள். வந்து பார்த்துக் கொள்கிறேன்.

1 comment:

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

All the best for your trip. And, by the way, please take your concern for Ravichandran with you. :)