Showing posts with label postman circle. Show all posts
Showing posts with label postman circle. Show all posts

Monday, October 20, 2008

இது எனது 60-வது பதிவு

வலையுலக நண்பர்களே இது எனது 60வது பதிவு. இதுவரை 59 பதிவுகள் போட்டிருந்தேன். இதோ மேலும் ஒன்று. ஆக மொத்தம் 60. அதாவது 60வது பதிவு. நன்றி.

Monday, September 22, 2008

டோண்டு ராகவனிடம் 2 கேள்விகள்

வலையுலகின் புதியவனான எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. சொல்லப்போனால் கவனிக்கக்கூட மறந்துவிட்டேன். ஆம். நான் ஐம்பது பதிவுகளுக்கும் அதிகமாக எழுதியிருக்கிறேன். இது 54வது பதிவு. மிக நெகிழ்வாக இருக்கிறது. முதல் பதிவு என்ற ஒற்றை வரியோடு என் முதல் பதிவை எழுதினேன். அது பல அர்த்த விரிவுகளுக்கு இட்டுச் சென்றதாக பல நண்பர்கள் கூறினர். இந்த ஐம்பது பதிவு கால இடைவெளியிலே எவ்வளவோ நிகழ்வுகள். திரும்பிப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. இவ்வளவு செய்திருக்கிறோமோ என்று என்னையே வியந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் பொறுப்பும் அதிகரித்து இருக்கிறது என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.

என் பதிவுகளிலேயே எனக்குப் பிடித்த பதிவு என்று சுட்டிக் காட்டச் சொன்னால் இரு பதிவுகளை குறிப்பிடுவேன். ஒருமுறை தமிழ்மணம் திறந்து பலர் பதிவுகளைப் படித்தே நள்ளிரவு ஆகிவிட்டது. மிக தூக்கமாக வந்தது. எனவே தூக்கம் வருகிறது தூங்க போகிறேன் என்று ஒரு பதிவிட்டேன். அதற்கு ஒரு அனானி குட்நைட் என்று பின்னூட்டம் இட்டார். அந்த அன்பில் உண்மையிலே கரைந்து போனேன். மற்றொரு அன்பர் விதேச பாஷையில் பின்னூட்டி நலம் விசாரித்தார். ஒரு பிளாக்கராக இருப்பதன் விழுமியத்தை நான் அறிந்த தருணம் அது. மற்றொரு பதிவு ரிமைண்டர். பொதுவாக ஒரு நாளில் நான் செய்ய உத்தேசித்துள்ள வேலைகளை எனது மொபைல் போனில் குறித்து வைப்பது வழக்கம். அப் பதிவிட்ட சமயம் என் மொபைல் சார்ஜரில் இருந்தது. எனவே ரிமைண்டரை ஒரு பதிவாகவே வெளியிட்டேன். உலகத் தமிழர்கள் அனைவரும் அதை படித்து அறிந்தார்கள் என்பதே நான் ஒரு வலைப்பதிவாளனாக இருப்பதன் அர்த்தத்தை எனக்கு விளக்கியது.
இந்த ஐம்பதாம் பதிவு கொண்டாட்டத்தை ஒட்டி, நெடுநாளாக என் மனத்தில் இருப்பதை வெளியிட துணிபு கொண்டுள்ளேன். வெகுமூத்த பதிவரான டோண்டு ராகவனிடம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என நான் வலையுலகுக்கு வந்த காலத்தில் இருந்தே நினைத்து வருகிறேன். ஆனால் மிக ஜுனியரான நான் எப்படி அதைக் கேட்பது என்று இயல்பிலேயே என்னுள் உள்ள தயக்கமும் சங்கோஜமும் என்னை தடுத்துவந்தது. ஒருமுறை என் பதிவில் பின்னூட்டிய டோண்டு அவர்கள் கட் அண்ட் பேஸ்ட் செய்யும் நுட்பம் குறித்து சொல்லியிருந்தார். அப்போதுகூட கேட்க நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் ஐம்பது பதிவுகள் கடந்த நிலையில் வலையுலகில் எனக்கும் ஒரு நிரந்தர இடம் கிடைத்த தன்னம்பிக்கையோடு
டோண்டு ராகவனிடம் என் கேள்விகளை முன்வைக்கிறேன்.

கேள்வி நெ.1 : கம்ப்யூட்டர் துடைப்பதற்காக வைத்திருக்கும் மஞ்சள் துணியை நன்றாக விரித்துவைத்துதான் துடைக்க வேண்டுமா? மடக்கிய நிலையிலேயே துடைக்கலாமா?

கேள்வி நெ.2 : ஒருமுறை ஷட்டவுன் செய்யாமல் அப்படியே சுவிட்சை ஆப் செய்துவிட்டேன். இதனால் கம்ப்யூட்டருக்கு கெடுதி ஏதும் உணடா?

Thursday, June 5, 2008

மிடில்கிளாஸ் கேனயர்களை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள்

1. பனியன் போட்டிருப்பவன்.

2. ஹமாம¢ சோப் தேய்ப்பவன்.

3. சட்டைப் பையில் நீலக்கலர் மூடி தெரியும்படி ரெனால்ட் பேனா வைத்திருப்பவன்.

4. பெல்ட்டில் உறை போட்டு செல்போன் வைத்திருப்பவன்.

5. டிசம்பர் கடைசியில் டைரி, காலண்டர் கிடைக்குமா என பார்ப்பவரிடம் எல்லாம் கேட்பவன்.

6. சலூனில் கைகளை உயர்த்தி கக்கம் சிரைக்கச் சொல்பவன்.

7. பைக்கின் சைடில் பெட்டி வைத்திருப்பவன்.

8. பிஸ்லரி தண்ணீர் தீர்ந்ததும் பாட்டிலை மறக்காமல் வீட்டுக்கு எடுத்து வருபவன்.

9. ரிமோட்டுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பவன்.

10. 50 கட்டுரை எழுதியதற்கு எல்லாம் புளகாங்கிதம் அடைந்து பதிவு போடுபவன்.

11. அதற்கு உருகி உருகி பின்னூட்டம் இடுபவன்.

12. என் மகன் எஸ்எஸ்எல்சியில் 405 மார்க் என்று எஸ்எம்எஸ் அனுப்புபவன்.

Thursday, May 15, 2008

நட்சத்திரப் பதிவர் த. அகிலன் கவனத்துக்கு.....

உங்கள் பதிவு படித்தேன். எஸ். எழில்வேந்தன் நேர்காணல் மிக சுவாரசியம். என் பால்ய காலம் இலங்கை வானொலி கேட்டே கழிந்தது. கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது, ராமதாஸ் (என்று நினைக்கிறேன்) ஆகியோரின் காந்தக் குரலில் அப்போதெல்லாம் கட்டுண்டு கிடப்பேன்.
கே.எஸ். ராஜா அளிக்கும் திரை விருந்து மிகப் பிரபலம். Ôவீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டி அருகே அமர்ந்திருக்கும் திரைப்பட ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என் அன்பு கழுமிய வணக்கங்கள்Õ என மின்னல்வேகத்தில் அவர் அறிவித்துச் செல்லும் பாங்கு, நம் உடலுக்குள் ரசவாதத்தை ஏற்படுத்தக் கூடியது.
திரைப்படத்தின் முன்னோட்டமாக கொடுக்கும் நிகழ்ச்சிதான் திரை விருந்து. அதில் பல Ôகிம்மிக்ஸ்Õ வேலைகளையும் ராஜா நிகழ்த்திக் காட்டியிருப்பார். ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த படம் Ôநீயா?Õ. அதில் ஸ்ரீப்ரியா ஒரு பாம்பு. அந்த பாம்பின் புருஷனும் ஒரு பாம்பு. அதன் பெயர் ராஜா. இந்த இரண்டு பாம்புகளும் கூடிக் குலவிக் கொண்டிருக்கிற நேரத்திலே, காட்டுக்குள் வரும் கமல் தலைமையிலான வெட்டிப் பயல்கள் கூட்டம், ஸ்ரீப்ரியாவின் புருஷன் பாம்பை சுட்டுக் கொன்று விட்டுப் போய்விடும். அப்போது ஸ்ரீப்ரியா தனது அழகிய குரலால், Ôராஜா...என்னை விட்டுப் போய்ட்டீங்களா...Õ என்று அலறுவார். நீயா பட திரை விருந்து கொடுக்கும்போது, நிகழ்ச்சி முடியும் நேரத்தில் ஸ்ரீப்ரியா அலறலை வெளியிடுவார்கள். Ôராஜா....என்னை விட்டுப் போய்ட்டீங்களா...Õ. உடனே கே.எஸ். ராஜா தனது கம்பீரத் தொண்டையில் இப்படிச் சொல்வார்: Ô....இல்லவே இல்லை...மீண்டும் சனிக்கிழமை இதே நேரத்தில் திரை விருந்தில் உங்களைச் சந்திக்கிறேன். இப்போது உங்களிடம் இருந்து விடைபெறுவது கே.எஸ். ராஜ்ஜா...Õ
இப்படிப்பட்ட ஆளுமையான கே.எஸ். ராஜா, கடைசியில் தமிழகம் வந்து தண்ணியடித்தே செத்துப் போனது சோகம்.
உச்சரிப்பு நேர்த்தியின் உச்ச நட்சத்திரம் பி.ஹெச். அப்துல் ஹமீது. அவரின் அதிரும் குரலில்நேர்த்தியற்ற ஒலிபெருக்கிகள் கூட கம்பீரம் பெற்றுவிடும். உதயாவின் பாட்டு¢க்குப் பாட்டு, அவரது ஹைலைட் நிகழ்ச்சி. Ôசுபததாச உள்ளரங்கிலே....Õ என்று அவர் சொல்வது இன்னும் கூட என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏழு கேள்விகள் என்றொரு நிகழ்ச்சியும் பிரபலம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு தாபன அறிவிப்பாளர்கள் வழங்கும¢ என¢ விருப்பம் சுவையானது. ஒவ்வொரு அறிவிப்பாளரின் பாடல் ரசனையையும் அறிந்து கொள்ளலாம். அப்துல் ஹமீதுக்கு எப்போதும் சோகம் இழையோடும் மெலடிதான் பிடிக்கும். ஒருமுறை இப்படி அறிவித்தார். Ôபடத்தில் ஒரு குதிரை பாடுவது போல இந்த பாடல¢ வந்தாலும்...கண்டசாலாவின் குரலால் அழகுபெற்ற பாடல் இது...Õ என்று சொல்லி, Ôஎஜமான் பெற்ற செல்வமே...என் சின்ன எஜமானேÕ என்ற திராபை பாடலைப் போட்டார். நொந்து போனேன்.
தமிழகம் வந்து பல்வேறு நுண்ணரசியல்களால் பந்தாடப்பட்ட அவர், நிழல¢கள் ரவி அம்மன் முறுக்குக¢ கம்பிக்கு விளம்பரம் செய்கிற ரேஞ்சுக்கு, சி கிளாஸ் விளம்பர மாடலாக மாறிப் போய்விட்டார்.
இலங்கை வானொலியின் சாதனை ஒலிச்சித்திரம். முழுநீளத் திரைப்படத்தை அரை மணி அல்லது முக்கால் மணி நேரத்துக்குள் சுருக்கி, ஒலி வடிவில் அற்புதமாக கொடுத்து விடுவார்கள். எடிட்டிங் நேர்த்தி அவ்வளவு சிறப்பாக இருக்கும். வசனங்கள் நிறைந்த படங்கள் என்றால் வசதி. அருமையாகக் கொடுத்து விடலாம். பட்டிக்காடா பட்டணமா, விதி போன்ற படங்கள் இந்த ரகம். ஆனால், ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை வசனம¢ வரும் பாலுமகேந்திராவின் படத்துக்கே ஒலிச்சித்திரம் போட்டு அசத்தியவர்கள் இலங்கை வானொலிக்காரர்கள். பாலுமகேந்திராவின் படங்களில் காட்சிகளுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும். அப்படிப்பட்ட Ôஅழியாத கோலங்கள்Õ என்னும் படத்தைக்கூட ஒலிச்சித்திரமாக்கி அசத்தியது ரேடியோ சிலோன். எப்படி? ஷோபா, தன் பாட்டுக்கு ஆற்றங்கரை ஓரமாக நடந்துகொண்டே, தூரமாய் போகும் மாணவர்களைப் பார்த்து கையசைக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பின்னணி இசை மெலிதாய் ஒலிக்க, திரைச்சித்திரம் வழங்கும் அறிவிப்பாளர் மெல்லியதாய் அதிரும் குரலில் சொல்வார். நதியோரமாக ஆசிரியை போய்க்கொண்டிருக்கிறார்.. எதிர்வரும் மாணவர்களை...என்ற ரீதியில் போகும். அடேயப்பா என்ன உத்தி என்று சின்ன வயசில் வியந்திருக்கிறேன்.
என் அப்பா சொல்வார். இலங்கை வானொலியில் முன்பு மயில்வாகனம் சர்வானந்தா என்றொரு அறிவிப்பாளர் இருந்தாராம். அவர் அவ்வளவு பிரபலம். அந்தக் காலத்தில் தங்கவேலு நடித்த Ôநான் கண்ட சொர்க்கம்Õ படத்தில் சொர்க்கத்துக்குப் போகும் தங்கவேல் தன் கையில் வைத்திருக்கும் ரேடியோவைத் திருப்பும்போது, Ôஉங்கள் அன்பு அறிவிப்பாளர் மயில்வாகனம் சர்வானந்தா...Õ என்று சொல்லுமாம். உடனே தங்கவேலு, Ôஅடப்பாவிகளா..இவனுக சொர்க்கத்துக்கு வந்தாலும் விடமாட்டானுகளா...Õ என்பாராம்.
தற்போதைய பண்பலை அறிவிப்பாளர்களின் உச்சரிப்பை பற்றித் தரம் தாழ்த்தி சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அது தேவையற்றது என்பது என் எண்ணம். இது வேகத்தின் காலம். ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் மயக்கும் குரல் கேட்டு நான் காதல்வயப்பட்டிருக்கிறேன். சூரியன் எப்.எம்.மின் பழைய கண்மணியின் குரலுக்கும் இப்போதைய டோசிலாவின் குரலுக்கும் மாபெரும் ரசிகன் நான். தியாகராஜ பாகவதர் காலத்து ஆட்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் காலம் பிடிக்காது. எம்.எஸ்.வி காலத்தவருக்கு இளையராஜா பிடிக்காது. இளையராஜா கோஷ்டிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பிடிக்காது. என்னைப் பொருத்தவரை, Ôபொன் மகள் வந்தால்Õ டி.எம்.எஸ்.ஸ§ம் பிடிக்கிறது. அதன் ரீமிக்ஸ§ம் பிடிக்கிறது.சிறுபிராய நினைவுகளைக் கிளறியமைக்காக வெம்மை பொங்கும் இந்த நள்ளிரவிலே நன்றி சொல்லிக் கொள்கிறேன் அகிலன்.